tamilnadu

தூய்மை தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊதியத்தை வழங்குக சிஐடியு வலியுறுத்தல்

கோவை, மே 9- தூய்மை தொழிலாளர்களுக்கு தமிழக அரசால் அறிவிக் கப்பட்ட சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்  என சிஐடியு ஊரகவளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இச்சங்கத்தின் தலைவர் சி.பத்மநாபன், பொதுச்செயலாளர் கே.ரத்தினகுமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகையே அச்சுறுத்த லுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் மக்களின் சுகாதா ரத்தை பாதுகாக்கும் வகையில் தூய்மைத் தொழிலாளர்கள் பேரிடர் காலங்களில் கூட விடுமுறையின்றி கடுமையாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இரட்டிப்பு ஊதி யம் என்கிற வகையில் சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.  

இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் ஆண்,பெண் தொழிலாளர்கள், சுயஉதவிக்குழுக்கள், ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப்பணியில் இத்தொ ழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த சிறப்பு ஊதியம் இதுவரையில் தூய்மைப் பணியாளர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. உடனடியாக இத்தொகையை வழங்க வேண்டும். மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பேரிடர் காலத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் இத்தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு அரசு சிறப்பு ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.