tamilnadu

img

பாலியல் வன்கொடுமை போக்சோ சட்டத்தில் வங்கி ஊழியர் கைது

கோவை, ஜன. 3 –  மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வங்கி ஊழியரை போக்சோ சட்டத்தில் காவல்துறை கைது செய்துள்ளனர். கோவை செல்வபுரம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 13  வயது மாணவியை, அதே பகுதியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியராக வேலை பார்க்கும் ராம்குமார் என்பவர் வீட்டுக்குள் புகுந்து  மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி தனது தாயாரி டம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதன் பேரில்  ராம்குமார் மீது  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இந்த வழக்கை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். அங்கு விசாரணை மேற்கொண்ட போலீ சார் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராம்குமாரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

;