கொரோனாவுக்கு தடுப்பூசி, மருந்து மாத்திரைகள் கண்டு பிடிக்காத சூழலில் குணம டைந்து வீடு திரும்பினார்கள் என்ற பட்டியலை தினசரி மத்திய- மாநில அரசுகள் அறிவித்து வரு கின்றன. இது உண்மைதானா? என்று படித்தவர் கள் முதல் பாமர மக்கள் வரைக்கும் எழுப்பும் கேள்வி களாகும்.
இதற்கு விடை தேடி அரசு மருத்துவர்கள் சிலரை அணுகிய போது அவர்கள் அளித்த விளக்கம்.
வைரஸ் தொற்றால் பாதித்தவர்கள் மூன்று, ஐந்து நாட்களில் குணமடைய சாத்தியம் இருக் கிறதா?
ன்பது குறிப்பிட்ட தன்மையுடன் ஒரு குறித்த காலம் வரையில் நீடித்திருக்கும். “ஒன்று நம்மை அது கொல்லும்” அல்லது “நாம் அதை வெல்வோம்”. இது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தது. நோய் எதிர்ப்பு சக்தி உச்சத்தை அடையும் போது ஒரே நாளில் கூட நாம் நோய்த் தொற்றிலிருந்து விடு படுகிறோம் அல்லது மீண்டு விடுகிறோம். இத் தனை நாள் தான் இருக்கும் என்றும் கூற முடி யாது. ஒரு சில நோய்கள் வருடக் கணக்கில் இருக்கும். குணமடைந்து விட்டது என்று சொல்லவே முடியாது. உதாரணம் தொழுநோய். தொற்று என்பது நோய் வாய்ப்படுவதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். வைரஸ் தொற்று இருக்கும் அனைவரும் நோயாளிகள் இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் தொற்று பரவும். கிருமி நமது உடலில் இருக்கிறது என்றாலே வியாதி இருக்கி றது என்பதும் கிடையாது.
தொற்றுக்கு ஆளாகி இருந்தாலும் நமது உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் தொற்றில் இருந்து நாம் விடுபடலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவோ அல்லது இணை (நீரழிவு, ரத்தக்கொதிப்பு) நோய்களுடன் இருந்தாலோ நமக்கு பாதிப்பு ஏற்படும். கொரோனா உள்ளிட்ட எந்த ஒரு தொற்றுக் கும் ஆளாகும் அனைவருமே கடுமையான பாதிப் புக்குள்ளாக மாட்டார்கள். வைரஸ் தொற்று பாதிப்புகள் தனக்கான எல்லை வரையறைகளைக் கொண்டிருக்கும். இந்த வைரஸ் தொற்றுகளை நமது உடலில் உள்ள எதிர்ப்பு ஆற்றல்கள் போராடி அழிக்கின்றன. நமது உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியைக் கொண்டு வைரஸ் தொற்றை அழிப்பது என்பது, “அம்மியில் ஒரு பொருளை பொடியாக்குவது” போன்றதாகும். அதேசமயம், மருந்துகளைக் கொண்டு வைரஸை எதிர்ப்பது என்பது “மிக்ஸி யைப் பயன்படுத்தி ஒரு திடப் பொருளை பொடி யாக்குவதாகும்”.
பாராசிட்டமால், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரையால் மட்டுமே கொரோனாவை விரட்ட முடியுமா?
கொரோனா வைரஸுக்கு எதிராக தற்போது ரெம்டெஸிவர் மற்றும் டோசிலிசுமாப் ஆகிய மருந்துகள் சிறந்த முறையில் வேலை செய்வதாகக் கண்டறியப்பட்டுள்ளன. பாராசிட்டமால் மாத்திரை கள் நமது உடலில் உள்ள வெப்ப நிலையையும், உடல் வலியையும், அனைத்து வகையான காய்ச்சல்களை யும் குறைக்க உதவிடும். ஆனால், இது கொரோனா வுக்கு எதிரான ஒரு குறிப்பிட்ட மருந்து அல்ல. எந்த தொற்றுக்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவுகள் இருக்கின்றன. தொற்றுக்கு எதிராக நமது உடலில் உள்ள எதிர்ப்பு ஆற்றலானது இரண்டு வகைகளில் வினையாற்றுகிறது. அதாவது ஒன்று வைரஸைக் கொன்று உடனடியாக செயலாற்று வது. மற்றொன்று நோய்த் தொற்று தாக்கிய வைர ஸின் தன்மையை நினைவில் கொண்டு வருங்கா லத்தில் அது தாக்கும் போது அதிலிருந்து நம்மைக் காக்கும். அதாவது, நமது ராணுவப் படையினரைப் போன்று செயலாற்றும்.
கொரோனா தொற்றிலிருந்து உடல் ரீதியாக வெற்றி பெறுவது எப்படி?
இந்த வைரஸுக்கு எதிராக உடனடியாகச் செய லாற்றுவது ஐஜிஎம் என்பதாகும். அதாவது இம் முனோக்ளோபுலின்-எம் என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. புதிய வைரஸ் ஒன்றுக்கு எதிராக உடலில் உடனடியாக உருவாகும் நோய் எதிர்ப்பு ஆற்றலாகும். ஐஜிஜி என்பது மிகவும் வலி மையான, நீண்ட கால அடிப்படையில் நோய்த் தொற்று தாக்குதலில் இருந்து நம்மைக் காப்பதா கும். எடுத்துக்காட்டாக சின்னம்மையைக் குறிப்பிட லாம். இது ஒருமுறை நம்மைத் தாக்கினால் அதன் மூலமாகக் கிடைக்கும் நோய்த் எதிர்ப்பு ஆற்றல் அந்த நோய் மீண்டும் தாக்காமல் இருப்பதற்கான சக்தியைத் தரும்.
பாதித்தவர் உடலில் இருந்து கிருமி அழிந்து விட்டதை உறுதி செய்வது எப்படி?
கொரோனா போன்ற சில தொற்றுகளால் இந்த ஐஜிஜி எனப்படும் எதிர்ப்பு ஆற்றல் குறைந்தால் நாம் தொற்று தாக்குதலுக்கு மீண்டும் உள்ளாகி றோம். ஆனால், கொரோனா தொற்று என்பது புதி தான ஒன்றாகும். அது ஒருமுறை மட்டுமே நம்மைத் தாக்கக் கூடியதா என்பது போன்ற கேள்விக ளுக்கு இதுவரை விடையில்லை. எனவே, இது தொடர்பாக நடைபெற்று வரும் ஆராய்ச்சிகளின் முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டி யுள்ளது.
ஒரு முறை வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட நபருக்கு திரும்பவும் வர வாய்ப்பு இருக்கிறதா?
பல்லாண்டு காலம் தாக்குதலைத் தொடுத்த அம்மை நோய்க்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான் உலக சுகாதார மையத்தின் அங்கீகரிக்கப் பட்ட தடுப்பூசி உலகம் முழுவதும் சந்தைக்கு வந்தது. புதிதாக வந்திருக்கும் இந்த கிருமிக்கு உட னடியாக தடுப்பு ஊசி, மாத்திரைகள் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைப்பது தவறான போக்கா கும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று ஒரே ஆண்டிற் குள் தடுப்பூசி மாத்திரைகள் கண்டுபிடிக்க முடி யாது. ஒருவேளை அதுபோன்று கொண்டு வந்தால் அது பேராபத்தில் தான் முடியும். எனவே, ஐஜிஜி எனப்படும் உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தரக்கூடிய அமைப்பு சிறந்த முறையில் இருந்தால் நாம் கொரோனா, தொற்று தாக்குதலில் இருந்து விரைவில் வெளியேறி விடு வோம்.
பிளாஸ்மா தெரபி முறையின் அடிப்படையும் இதுதான். நோய்த் தொற்று தாக்குதலில் இருந்து விடுபட்ட நபர்களுக்கு எதிர்ப்பு ஆற்றல் அதிக ரித்திருந்தால் மட்டுமே நோய்த் தாக்குதலுக்கு உள்ளான நபர்களுக்கு பயன்படுத்துகிறோம். தொற்றுக்கு ஆளானவர்கள் மீண்டும் தொற்றால் பாதிக்கப்படுவார்களா என்பது குறித்த ஆதாரங்களோ, தரவுகளோ ஏதுமில்லை. இது குறித்து சில காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதே சிறந்தது. பொதுவாகவே தொற்றுக்கு ஆளான பிறகு நமது உடல் மிகவும் வலுவிழந்து போய் இருக்கும். எனவே அதன் வழியாக மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கலாம். எனவே மிகவும் கவன முடன் இருப்பது நல்லது.
நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் தொடர்ந்து உட்கொள்வதால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் புண், வயிற்று வலி ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதுபற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. விஞ்ஞான ரீதியாகவும் நிரூபிக்கப்படவில்லை. அளவுக்கு மேல் எடுத்திருந்தால் அதனை நிறுத்திக் கொள்ளலாம். மற்றபடி அளவுடன் குடித்துக் கொள்வதில் தவறில்லை.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மேற் கொள்ள வேண்டியது என்ன?
உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் என்பது பூஸ்ட், ஹார்லிக்ஸ், சாக்லேட் போன்ற விளம்பரங்களில் சொல்லப்படுவது போன்று ஒரு நாள் இரவிலோ அல்லது சில நாள்களிலோ உருவாகி விடாது. அது பல ஆண்டுகாலமாக நமது உடலில் கட்டமைக் கப்படுவது. மேலும், உடலில் நோய் எதிர்ப்புக்கான ஆற்றல் நமது தாயிடம் இருந்தே நமக்கு தொடங்கு கிறது. தொற்று ஏற்பட்டால் அதிலிருந்து மீள எதிர்ப் பாற்றல் களமாடி நமக்கு உதவுகிறது. இதன்மூலம் நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள், முதலில் எந்தவித மன அழுத்தத்துக்கும் ஆளாகாமல் இருக்க வேண்டும். சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதன் மூலம் மீண்டும் ஒருமுறை தொற்றுக்கு ஆளாகாமல் இருக்கலாம். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் இருந்தால் அதனை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நல்ல உடல் ஆரோக்கியமும், உணவும், நல்ல தூக்கமும், உடற்பயிற்சியும் இருந்தால் போதுமானது. வருங்கால தலைமுறையினருக்கு உடல் நலன் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வையும், ஆரம்ப சுகாதாரம் குறித்த அடிப்படை அறிவை யும் பள்ளி அளவிலேயே புகட்ட வேண்டும். இது நம் ஒவ்வொருவருக்கும் பயன் அளிக்கக் கூடியதாக அமைந்திடும். நாம் இப்போதிருக்கும் நிலையைத் தாண்டி நிச்சயம் மீண்டு வருவோம்.
தொகுப்பு : சி.ஸ்ரீராமுலு