கிருஷ்ணகிரி, நவ. 14- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம் முத்தாலி ஊராட்சியிலிருந்து செல்லும் கெல வரப்பள்ளி அணை பகுதி சாலை 20 ஆண்டு களாக சீர்படுத்தப்படாமல் குண்டும் குழியு மாக மழைக் காலங்களில் சேறு குழப்பிய வயல் போல்மாறிவிடுகிறது. சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த சாலையில் அவசர ஆபத்திற்கு ஆட்டோ காரர்கள் கூட எவ்வளவு பணம் கொடுத்தா லும் வர மாட்டோம். அது சாலையே அல்ல என்று கூறிவிடுகிறார்கள். பல நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் கூட அவசரத்திற்கு வர மறுக்கிறது. இந்த சாலை வழியில் தான் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு இருசக்கர வாகனங்களில் தினமும் சுமார் 8 கிராமங்களை சேர்ந்தவர்கள் சென்று வர வேண்டியிருக்கிறது. நடந்து செல்வதும் உயிர் வதையாக இருக்கிறது. இந்த வழியில் வந்துச் செல்லும் இரு நகரப் பேருந்துகளும் பல நேரங்களில் பழுதாகி வழி யிலேயே நின்றுவிடுகிறது. இந்த சாலையை சீர்படுத்த ஒன்றல்ல இரண்டல்ல 20 ஆண்டு காலமாக பல முறை பல அதிகாரிகளிடம் மனு கொடுத்து கொடுத்து மக்களும் வெறுத்துப் போய் உள்ளனர். இது பொதுப்பணித் துறைக்கு சொந்த மான சாலை நாங்கள் போட முடியாது என்று நெடுஞ்சாலைத் துறையினர் கைவிரித்து விடுகிறார்கள். பொதுப்பணித் துறையினரை கேட்டால் ரோடு போடுவது எங்கள் வேலை இல்லை. நெடுஞ்சாலை துறைதான் போட வேண்டும் என்பதுமாக மக்களை கால்பந்து விளையாடி வருகின்றனர். அணையை காண வரும் வேறு பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கூட அர சாங்கத்தையும் இந்த இரு துறைகளையும் சபித்துக் கொண்டேதான் வந்து செல்கின்ற னர். 8 ஊர்களின் விவசாயிகள், பெண்கள், பொதுமக்கள், விளை பொருட்கள், காய்கறி கள், உரம், உணவுப் பொருட்கள் வாங்க தின மும் இரண்டு மூன்று முறை இந்த பல்லாங்குழி சாலையில் தான் வந்து நொந்து போகின்ற னர். இந்நிலையில், இந்த சாலையை சீர்படுத்த தமிழக அசை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் தட்டகானப்பள்ளி கிராஸ் முதல் சென்னசந்திரம் வரை பாதயாத்திரை துவக்கப்பட்டது. காவல்துறையினரால் அனு மதி மறுக்கப்பட்டதால் விவசாயிகள் சாலை மறியலாக மாற்றினர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் வட்ட பொருளாளர் ராஜாரெட்டி தலைமை தாங்கி னார். மாவட்டத் தலைவர் கோதண்டராமன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.வட்டச் செயலாளர் தேவராஜ் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி ஜி.மூர்த்தி வாழ்த்திப் பேசினார். ஒன்றிய நிர்வாகிகள் எல்லப்பா, சென்னா ரெட்டி,, ஆனந்த் ரெட்டி, ராஜப்பா, மற்றும் பலர் கலந்து கொண்டனர். இரண்டு மணி நேரமாக நடைபெற்ற மறிய லின் முடிவில் காவல் துறையினர் வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற் றது. 10 நாட்களில் ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைத்துத்தர அரசு அதிகாரி கள் உத்திரவாத கடிதம் அளித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்திய போராட்டத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ள தால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.