ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்
நாட்டின் முதன்மையான உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சிக்கோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பலமான கர்நாடக அணியை பெங்கால் அணி எதிர்கொண்டது. தொடக்கம் முதலே சிறப்பாக விளை யாடிய பெங்கால் அணி 174 ரன்கள் வித்தி யாசத்தில் கர்நாடக அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென் றால் கே.எல். ராகுல், கருண் நாயர், மணிஷ் பாண்டே போன்ற உலக தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தும் கர்நாடக அணி இரு இன்னிங்ஸிலும் 200 ரன் களைக் கூட தொட முடியாமல் (தனித் தனியாக) போனது இந்திய கிரிக்கெட் உலகில் பெரும் ஆச்சர்யத்தை ஏற் படுத்தியுள்ளது. இதற்கு காரணம் பெங்கால் பந்து வீச்சாளர்கள் இஷான் போரெல், முகேஷ் குமார் ஆகியோர் தான். இவர்களது மிரட்டலான பந்துவீச்சால் தான் பெங்கால் அணி இறுதிக்கு முன் னேறியது. சவுராஷ்டிரா - அணிகள் மோதும் முதலாவது அரையிறுதி ஆட் டம் டிராவை நோக்கி நகர்ந்து வரு கிறது. வருவதால் எந்த அணி இறுதிக்கு முன்னேறும் என்பதில் குழப்பம் நீடிக்கி றது. புதனன்று நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் முடிவு தெரிந்துவிடும்.