tamilnadu

காஞ்சிபுரத்தில் பிளாஸ்டிக் பைகள் விற்ற கடைக்கு ‘சீல்’

காஞ்சிபுரம்,பிப்.13- காஞ்சிபுரம் மாவட்டத் தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடைகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் சில கடைகளில் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது நீடிக்கிறது. இந்நிலையில் காஞ்சி புரம் பெருநகராட்சி ஆணை யர் மகேஸ்வரி தலைமை யில் நகர்நல அலுவலர் முத்து மற்றும் அதிகாரிகள் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள வணிக நிறுவனங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஒரு கடை யில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் இருப்பதை கண்டறிந்து அவற்றை பறி முதல் செய்தனர். மொத்தம் 300 கிலோ எடை கொண்ட பல்வேறு வகையான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே மூன்று முறை இந்த கடைக்கு எச்ச ரிக்கை விடுத்தும் விதிகளை மீறி தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து அந்த கடைக்கு ‘சீல்’ வைக்க நகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவிட்டார். மேலும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப் பட்டது.