tamilnadu

img

பெரியார் சிலை அவமதிப்பு: இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் கைது

திருக்கோவிலூர், ஜூலை 19- திருக்கோவிலூரில் தந்தை பெரியார் சிலையை அவமதிப்பு செய்த இந்து  மக்கள் கட்சியின் மாவட்டச்  செயலாளர் கைது செய்யப்  பட்டு சிறையிலடைக்கப் பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம்  திருக்கோவிலூர் அருகே உள்ள கீழையூர் மூன்று சாலை சந்திப்பில் அமைந்  துள்ள பெரியார் சிலை கடந்த  17ஆம் தேதி நள்ளிரவு சமூக விரோதிகளால் அவமதிப்பு செய்யப்பட்டிருந்தது. இத னைக் கண்டித்தும், சமூக விரோதிகளை கைது செய்ய  வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவிடர் கழகம் சார்பில் திருக்கோவிலூரில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் டி.ஏழுமலை தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அதேபோல் திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் பல்வேறு இடங்க ளில் சாலை மறியல் நடை பெற்றது. இந்நிலையில் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்  காணிப்பாளர் உத்தரவின் பேரில், துணை காவல் கண்  காணிப்பாளர் மகேஷ் மேற் பார்வையில் ஆய்வாளர் உதவி ஆய்வாளர்கள் தலை மையில் தனிப்படை அமைக் கப்பட்டது. தனிப்படை காவல் துறையினர் செல்  போன் எண்ணை சோதனை  செய்ததில், அரகண்டநல் லூர் பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர் இந்து மக்கள்  கட்சியின் மாவட்டச் செயலா ளர் பொறுப்பு வகித்து வரு கிறார். மணியிடம் விசா ரணை நடத்தியதில் பெரியார்  சிலையை அவமதித்ததை அவர் ஒப்புக்கொண்டார். பின்  னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும்  நிலையில் அதிலிருந்து மக் களை பாதுகாப்பதை பற்றிக் கவலைப்படாமல் சமூக பதட்  டத்தை உருவாக்கும் செயல்  களில் ஈடுபடும் இப்படிப் பட்ட நபர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க  வேண்டும் என சமூக நல  இயக்கங்கள் வலியுறுத்தி யுள்ளன.