tamilnadu

img

கன்னிப்பூ பாசனத்திற்கு அணைகள் திறப்பு

குழித்துறை, ஜுன் 8- கன்னியாகுமரி மாவட்டத்தில்  கன்னிப்பூ பாசனத்திற்காக பேச்சிப் பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை கள் திங்களன்று திறக்கப்பட்டன . கன்னிப்பூ பாசனத்திற்காக ஜூன்  8 ஆம் தேதி அணைகள் திறக்கப்ப டும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி கோதையாறு மற்றும் பட்ட ணங்கால் கால்வாய்களில் பாசனத் திற்காக பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றார் -1 , மற்றும் சிற்றார்-2  அணைகளில் இருந்து மாவட்ட ஆட்சி யர் பிரசாந்த் மு.வடரநேரே முன்னி லையில் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் திறந்து வைத்தார். நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 850 கன அடி தண்ணீர் அணைகளில் இருந்து திறந்து விடப்ப டுவதால் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன பகுதிகளின் 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி  பெறுகின்றன.  மேலும் மாவட்டத்தில் உள்ள 2040  பொதுப்பணித்துறை குளங்கள் இந்த தண்ணீர் மற்றும் மழை யால் நிரம்புகின்றன. இதன் காரண மாக நடப்பு கன்னிப் பூ பருவத்தில்  6500 ஹெக்டேர் நெல் நடவு பணி கள் நடைபெற உள்ளது.  இந்நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், நீர்பாசனத்துறை தலை வர் வின்ஸ்ஆன்றோ, மாவட்ட அரசு  ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் டி.ஜாண் தங்கம், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள், வேளாண் பெருங்குடி மக்கள் என ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.