நாகர்கோவில், ஜூன்.24- தமிழ்நாடு அரசுபோக்கு வரத்து கழகம், நாகர்கோ வில் மண்டலம், ராணித்தோ ட்டம் மத்திய அலுவலகம் மற்றும் தொழிற்கூடத்தில் 19 ஆம் தேதியன்று பழைய பொ ருட்கள் (ஆக்கர்) கொண்டு செல்ல வந்த மதுரையை சார்ந்த நபருக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்ய ப்பட்டது. அந்த குறிப்பிட்ட நபர் அலுவலகம், தொ ழிற்கூடம், பண்டகசாலை, உணவகம் அருகிலுள்ள ஹோட்டல், எடைபோடும் இடம் என சுற்றி திரிந்து ள்ளார். இது கொரோனோ பெருந்தொற்று பலருக்கும் பரவ வாய்ப்பாக மாறி யுள்ளது.குறிப்பிட்ட நபர் பெரும்தொற்றால் பாதிக்க ப்பட்டது உறுதிசெய்யப்ப ட்டது நிர்வாகத்திற்கு தெரி ந்திருந்தும் உடனடி நட வடிக்கை எடுக்காதாதுடன், மறுநாள் மாலை 3 மணி வரை தொழிலாளர்கள் பணி செய்ய நிர்பந்திக்கப்ப ட்டுள்ளனர்.
ஆகவே தொழிற்கூடம் மற்றும் தலைமை அலுவ லகம் உடனடியாக மூட ப்பட்டு கிருமிநாசினி அடித்து சுத்தம் செய்யவும், பணி யிலிருந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும், அனைத்து தொழிலாளர்களுக்கும் அரசு அறிவித்துள்ள சிறப்பு விடுப்பு அனுமதிக்கவும், பெரும்தொற்றை மறைத்து தொழிலாளர்கள் மத்தி யில் பதட்டம் ஏற்பட காரண மானவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கவும் வலியு றுத்தி சிஐடியு அரசு போக்கு வரத்து கழக தொழிலா ளர் சங்கம் சார்பில் ராணி த்தோட்டம் அரசு போக்கு வரத்து கழக பணிமனை முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்க பொது ச்செயலாளர் ஸ்டீபன் ஜெய க்குமார், நிர்வாகி லியோ உட்பட பலர் கலந்து கொண்ட னர். ஆர்பாட்டத்தில் டீசல் விலை உயர்வை கட்டுப்ப டுத்தவும், போக்குவரத்து கழ கங்களுக்கு மானிய விலை யில் டீசல் வழங்கவும், இந்த மாத இன்சன்டீவ் உடனே வழங்கவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.