tamilnadu

img

நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

கடலூர், டிச.5- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம் சிஐடியு  சார்பில் கடலூரில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உதவியாளர் நேரடி நியமனத்தை உடனே  கைவிட வேண்டும், அடிமட்ட ஊழியர்களின் பதவி உயர்வை பறிப்பதை எதிர்த்தும், பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலி பணியிடங்களை உடனே நிரப்பக் கோரியும், பொது விநியோக முறையை பலப்படுத்தக் கோரியும், பருவகால பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வலியுறுத்தியும், கொள் முதல் செய்யத் தேவையான தளவாடப் பொருட்கள் தரமானதாக வழங்க வலி யுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கடலூர் மண்டல தலைவர் ஜி.ராஜ்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் பி. உத்திராபதி, டி.கே.ரமேஷ், எம்.நாகப்பன்,  துணைச் செயலாளர்கள் எம்.செங்குட்டு வன், தில்லை கோவிந்தன், எம்.ராஜா ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மாநில பொதுச்செயலாளர் ஆர். புவனேஸ்வரன், சிஐடியு மாநில துணைத் தலைவர் பி.கருப்பையன், மண்டலச் செய லாளர் ஆர்.இளங்கோ ஆகியோர் சிறப்பு ரையாற்றினார்கள். மண்டல பொருளாளர் ஜெ.மணிவண்ணன் நன்றி கூறினார்.