சென்னை, மே 12- விழுப்புரம் அருகே 15 வயது பள்ளி மாணவி எரித்து கொலை செய்த குற்றவாளி களுக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,“விழுப்புரம் மாவட்டம் சிறு மதுரைக் கிராமத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஜெயசிறீ உள்ளூரைச் சேர்ந்த இருவரால் பட்டப்பகலில் எரித்துக் கொல்லப்பட்டார் என்பது மிகவும் கொடூர மானது மட்டுமல்ல வெட்கித் தலைகுனிய கூடியது” என்றும் தெரிவித்திருக்கிறார்.
என்னதான் முன்பகை இருந்தாலும், அதற்காக இப்படியொரு கொடுமையை நிகழ்த்த மனிதர்களுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ? உருவில் மனிதர்களாகவும், உள்ளத்தில் மிருகங்களாகவும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு தேவைப்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்ததுபோல, விரைந்து தீர்ப்பையும் பெற்றுத் தரவேண்டும் என்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் எது வேண்டுமானா லும் செய்யலாம் என்று கருதியிருந்தால், அந்த அதிகாரப் போதை மிகவும் ஆபத்தானது. அரசு சார்பில் ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டுள் ளது. வெறும் பணம், இழக்கப்பட்ட உயிரை மீட்க உதவப் போவதில்லை. அடிப்படை மனிதப் பண்புகளையும் அவ்வப்போது தலைவர்கள் தம் கட்சியினருக்கு ஊட்ட வேண்டியது மிகவும் அவசியமாகும் என்றும் வீரமணி தெரிவித்திருக்கிறார்.