சென்னை, ஏப்.23- சென்னையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்ப டுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் பிற்பகலுக்கு பிறகு தீவிர வாகன சோதனை நடத்தப் பட்டு வருகிறது. 500க்கும் மேற் பட்டவர்கள் ஒவ்வொரு நாளும் கைது செய்யப்பட்டு வருகி றார்கள்.
சென்னை மாநகர் முழுவதும் 33 இடங்களில் சோதனை சாவடி கள் அமைத்து காவல்துறையி னர் ஆய்வு நடத்துகின்றனர். பிற்ப கலுக்கு பிறகு சாலைகளில் தேவையில்லாமல் வாகனங்க ளில் சுற்றுபவர்களை கைது செய்வதுடன், அவர்களின் வாக னங்களை பாரபட்ச மின்றி பறி முதல் செய்ய காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, பிடிபடும் வாக னங்கள் உடனடியாக பொது மக்கள் திரும்ப பெறமுடியாது. ஊரடங்கு பரபரப்பு முடிந்த பிறகே பொதுமக்கள் தங்களது வாகனங்களை பெறமுடியும். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கையால் சென்னையில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்று பவர்களை கைது செய்யும் நடவ டிக்கைகள் தீவிரமாகியு ள்ளது. வெளியில் வாகனங்களில் சுற்றுப வர்களை பிடிப்பதுடன் அவர்க ளது வாகனங்களை பிடித்து, காவல் நிலையங்களிலேயே நிறுத்தி வைக்க முடிவு செய் யப்பட்டுள்ளது.
எனவே, பொது மக்கள் இனி வெளியில் சுற்றுவதை முற்றிலு மாக தவிர்க்க வேண்டும். இல்லை யென் றால் கொரோனா பரபரப்பு எப்போது அடங்குகிறதோ அப்போதுதான் தங்களது வாக னங்களை திரும்பப் பெற முடி யும். இதனை கருத்தில் கொண்டு பொது மக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்று வதை முற்றிலு மாக தவிர்க்க வேண்டும். அப் போதுதான் காவல்துறையினரின் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியும்.
இதற்கிடையே தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 80 சதவிகித வாகனங்கள் தேவை யில்லாமல் வெளியில் சுற்றுவதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக சொந்தமாக கார்கள் வைத்தி ருப்பவர்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தின மும் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனை கட்டுப்ப டுத்தவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டுள்ளது. இதன்படி தேசிய நெடுஞ்சாலைகளிலும் தீவிரமாக கண்காணிக்க காவல் துறையினர் முடிவு செய்துள்ள னர்.