நெல்லை,ஜூலை 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் தொழிற்சங்க தலைவருமான தோழர் எம்.ராஜாங்கம் ஜூலை 21 அன்று மதியம் 12 மணியள வில் காலமானார். அவருக்கு வயது77. தோழர் ராஜாங்கத்தின் துணைவியார் பெயர் சரஸ்வதி. இவர்களுக்கு மகாலெட் சுமி என்ற மகளும், பாலசுப்பிரமணியம், வரதராஜன் என்று இரு மகன்களும் உள்ளனர்.
சிபிஎம் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தொழிற்சங்க தலைவருமான தோழர் எம்.ராஜாங்கம் உடல்நலக்குறைவின் காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றோம். அவ ரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு அஞ்சலி செலுத்துகிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா நெட்டூர் கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர் கிராமம் கிராமமாகச் சென்று ஆதிக்கச் சக்திகளின் எதிர்ப்பையும் மீறி பீடித்தொழிலாளர்களை அணிதிரட்டி னார். உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்து பீடி சுற்றும் பெண் களுக்கு சட்ட உரிமைகளை பெற்றுத் தந்தார். பீடிசங்கம் மட்டுமல்லாது கைத்தறி, விசைத்தறி, பஞ்சாலை, போக்கு வரத்து, அமைப்புசாரா உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் சங்கங்களை உருவாக்கி யவர். அவசரநிலை காலத்தில் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறை யில் அடைக்கப்பட்டார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பின ராக, மாவட்டக்குழு உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றியவர். சிஐடியு மாவட்ட செயலாளராக, தலைவராக, மாநில நிர்வாகியாக நீண்ட காலம் செயல்பட்டவர். தோழர் ராஜாங்கம் அவர்களது மறைவுக்கு மார்கசிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தின ருக்கும் நெல்லை மாவட்டத் தோழர் களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.
ஜி.ராமகிருஷ்ணன், பி.சம்பத், டி.கே.ரங்கராஜன் இரங்கல்
கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் ராஜாங்கம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “பீடித் தொழிலாளர்களை அணிதிரட்டி அந்த சங்கத்தை ஒரு மாநில அமைப்பாக உருவாக்கியதில் தோழர் ராஜாங்கத்தின் பங்கு முக்கிய மானது. சிஐடியு அமைப்பின் சிறந்த தலைவர்களில் அவரும் ஒருவர். பீடிக்கம்பெனிகளுடன் நடை பெறும் பேச்சுவார்த்தைகளில் பீடித்தொழி லாளர்களுக்கு ஆதரவாகப் பேசுவதில், அவர்களுக்கான பலன்களை பெற்றுத் தருவதில் திறம்பட செயல்பட்டவர். செங்கொடி இயக்கம் ஒரு போராளியை இழந்துவிட்டது. அவரது மறைவிற்கு என்னுடைய இரங்கலை தெரி வித்துக்கொள்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.
சிஐடியு இரங்கல்
சிஐடியு தமிழ் மாநிலத் தலைவர் அ,சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தொழிலாளர் துறை, காவல் துறை, மாவட்ட ஆட்சி நிர்வாகத்துறை என அரசு துறை அதிகாரிகளிடம் அவ ருக்குரிய பாணியில் பேசி பிரச்சனைக் களுக்கு தீர்வு ஏற்படுத்தியவர். இருதய அறுவை சிகிச்சை உட்பட உடல்உபாதைகளையும் பொருட் கடுத்தாமல் பொதுமக்களின்பிரச்ச னைகள், தொழிலாளர் கோரிக்கைகள் போராட்டங்களில் பங்கெடுத்து ஊக்கத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியவர்.
தோழர்.எம்.ராஜாங்கம் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பா கும். அன்னாருக்கு சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் செவ்வஞ்சலி செலுத்துகிறோம். அன்னாரை பிரிந்து வாடும் மனைவி, மகன்கள் மற்றும் மகளுக்கும், தோழர் களும் சிஐடியு சார்பில் ஆழ்ந்த இரங் கலை தெரிவித்துக் கொள்கிறோம். தோழர். எம்.ராஜாங்கம் அவர்களது மறைவுக்கு சிஐடியு செங்கொடிகளை தாழ்த்தி இரங்கலை தெரிவிக்குமாறு சிஐடியு சங்கங்களை கேட்டுக் கொள்கிறோம்.