tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தல்: மேலும் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

 சென்னை,டிச.17- ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, திமுக சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொட ரப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்  கெடுப்பின்படி தேர்தலை நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுபடி, தமிழ் நாட்டில், வருகிற 27 மற்றும் 30ஆம் தேதி களில், 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித்  தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்,  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனி சாமிக்கு எதிராக,  உச்சநீதிமன்றத்தில், திமுக  சார்பில், திங்களன்று(டிச.16) நீதிமன்ற அவ மதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இந்தச் சூழலில், செவ்வாயன்று(டிச.17) உச்சநீதிமன்றத்தில், மேலும், ஒரு நீதிமன்ற  அவமதிப்பு வழக்கை, திமுக தொடர்ந் திருக்கி றது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு களை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறி, மாநில தேர்தல் ஆணையம் மற்றும்  தலைமைச் செயலாளருக்கு எதிராக இந்த வழக்கை திமுக தொடர்ந்துள்ளது.