அடிஸ்அபா, ஜூன் 12- எத்தியோப்பியாவில் குழந்தை யை பிரசவித்த அரை மணி நேரத்திலேயே மருத்துவமனை படுக்கையிலேயே தனது தேர்வுகளை எழுதினார். மேற்கு எத்தியோப்பியாவைச் சேர்ந்த அல்மாஸ் டெரீஸ் (21) கர்ப்பிணியாக இருந்தார். பிரசவம் நடப்பதற்கு முன்னரே தேர்வுகளை முடித்து விடலாம் என நினைத்திருந் தார். ஆனால் நடந்தது வேறு. ரம்ஜான் காரணமாக அவரது உயர்நிலைப் பள்ளித் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. இதனால் கடந்த திங்கள் கிழமையன்று அவருக்கு தேர்வுகள் நடப்பதற்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. அதனால் குழந்தையைப் பெற்றெடுத்த பின் அவர் தனது தேர்வுகளை எழுதினர். அவர் ஆங்கிலம், அம்ஹாரிக், கணிதம் உள்ளிட்ட தேர்வுகளை திங்கள் கிழமையன்று மருத்துவ மனையில் எழுதினார். அடுத்த இரண்டு நாள்களில் நடக்கும் தேர்வுகளை அவர் தேர்வு மையத்துக்குச் சென்று எழுதவுள்ளார். ‘‘கர்ப்பிணியாக இருக்கும்போது படிப்பது ஒன்றும் பிரச்சனையாக இருக்கவில்லை. அடுத்த ஆண்டு வரை நான் தேர்ச்சி பெற காத்திருக்க விரும்பவில்லை’’ என்று அல்மாஸ் டெரீஸ் கூறினார். ‘எனக்கு பிரசவம் ஒன்றும் அவ்வ ளவு கடினமான இருக்கவில்லை. ஆகையால் நான் அவசரமாக பரீட்சை எழுத உட்கார்ந்தேன்’’ எனவும் கூறினார். எத்தியோப்பியாவில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை இடையில் கைவிட்டு விட்டு பின்னர் படிப்பை முடிப்பது அங்குள்ள பள்ளி மாணவிகளிடம் பரவலாக காணப்படும் விஷயம். அதனால் மருத்துவமனையில் தனது மனைவிக்கு தேர்வு எழுதும் வாய்ப்பைப் பெறுவதற்கு அவர் படித்த பள்ளியை இணங்கச் செய்த தாக அல்மாசின் கணவர் தடீஸ் துலு கூறினார். தற்போது கல்லூரியில் சேர்வ தற்கான இரண்டு வருட படிப்பை முடிக்க வேண்டும் என அல்மாஸ் டெரீஸ் விரும்புகிறார்.அதனால் தேர்வு களை சிறப்பாக எழுதியிருப்பதாகவும் தனது ஆண் குழந்தை நன்றாக இருப்பதாகவும் அவர் கூறினார்.