tamilnadu

அடுத்தாண்டு முதல் பிஎஸ் 6 வாகனங்கள் விற்பனை

புதுதில்லி, ஜுன் 18- அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் பிஎஸ் 6 வகை வாகனங்கள் மட்டுமே கிடைக்கும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரி வித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் மாசுபாட்டை பிஎஸ் 6 வகை வாகனங்கள் பெருமளவு குறைக்க முடியும் என்று அவர் தெரி வித்துள்ளார். சுற்றுச்சூழல் மாசு என்பது இந்தியப் பிரச்சனை மட்டுமல்ல என்று கூறிய பிரகாஷ் ஜவடேகர், வாகனங்களால் மட்டும் 20 முதல் 22 விழுக்காடு வரை காற்று மாசு ஏற்படுவதாகக் குறிப்பிட்டார். எனவே அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் பிஎஸ் 6 வகை வாகனங்கள் மட்டுமே விற்கப்படும் என்று அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.