tamilnadu

img

கட்டுமான தொழிலாளர்கள் போராட்டம்

கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தக் கோரி சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் திங்களன்று (ஜூலை 13) உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், கட்டுமான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.சேகர், நிர்வாகி வீ.சிவா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடலூரில் கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் தி.கருப்பையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.