1564 - வயது வந்த முஸ்லிம் அல்லாத ஆண்கள்மீதான ஜிஸ்யா வரியை, முகலாயப் பேரரசர் அக்பர் ரத்து செய்தார். சமய அடிப்படையிலான தாக்குதலாகப் பொதுவாகச் சுட்டிக்காட்டப்பட்டாலும், முஸ்லிம்களுக்குக் கட்டாயமாக இருந்த ஸகா(த்), இஸ்லாமியச் சமயக் கட்டமைப்பால் வசூலிக்கப்பட்ட நிலையில், அந்தக் கட்டமைப்புக்கு உட்படாத பிற மதத்தினரிடமிருந்து, ஸகாவுக்கு இணையாக ஜிஸ்யா வசூலிக்கப்பட்டது என்பதே உண்மை. இஸ்லாத்தின் 5 தூண்கள் என்று குறிப்பிடப்படும், கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய கடமைகளில், தொழுகைக்கு அடுத்த முக்கியக் கடமையாக இது உள்ளது. தூய்மைப் படுத்துதல் என்ற பொருள்கொண்ட ஸகா, குறிப்பிட்ட அளவுக்குமேல் சொத்துள்ள முஸ்லிம்களிடமிருந்து, அவர்களின் சொத்தில் 40இல் ஒரு பங்கு (இரண்டரை சதவீதம்) அளவுக்கு செலுத்தப்படவேண்டும் என்று இஸ்லாம் வரையறுக்கிறது.
ரமலான் நோன்பு முடிவில் ஸகா- அல்-ஃபிட்ர் என்ற சிறிய தொகை, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம்களிடமும் வசூலிக்கப்படுகிறது. இவைதவிர, கடல் வணிகம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில முறைகளில் ஈட்டப்படும் வருவாயில் ஐந்தில் ஒரு பங்கு(20 சதவீதம்) கும்ஸ் என்ற பெயரில் வசூலிக்கப்படுகிறது. இவையனைத்தும், நாட்டின் நிர்வாகமே சமயத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காலத்தில், சமயக் கடமையாக வசூலிக்கப்பட்டு, மக்கள் அனைவரின் நலனுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிற சமயங்களைப் பின்பற்று வது தடைசெய்யப்பட்டிருந்தால், அனைவருமே இவற்றைச் செலுத்து பவர்களாக இருந்திருப்பார் கள். அப்படித் தடை செய்யப்படாததாலேயே, இவற்றைச் செலுத்தாதத வர்கள் இருந்தார்கள் என்ப தும், நாட்டின் பொதுவான நலனிற்காக, இஸ்லாத்திற்கு வெளியிலிருந்தவர்களிடம், ஜிஸ்யா வசூலிக்கப்பட்டது என்பதும் மறைக்கப்படும் உண்மைகள்.
தூய்மைப்படுத்திக்கொள்வதற்கான ‘பரிசு(ஜாஸா)’ என்பதிலிருந்து உருவான ஜிஸ்யாவைச் செலுத்திய பிற சமயத்தவர்கள், அவரவர் சமய நடைமுறைகளைப் பின்பற்றுவது உட்பட, முஸ்லிம்கள் பெற்ற அனைத்துப் பாதுகாப்புகளையும் பெற்ற னர். ராணுவத்தில் இணைந்து நாட்டைப் பாதுகாக்கும் பணி யிலிருந்தவர்களுக்கு ஜிஸ்யா இல்லை. சமயம் கடந்தவராக இருந்த அக்பரால் நீக்கப்பட்ட ஜிஸ்யா, 1679இல் அவுரங்கசீப்பால் மீண்டும் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்தியாவில் ஆட்சி செய்த வேறு எந்த இஸ்லாமிய அரசரையும்விட மிக அதிகமான முஸ்லிம் அல்லாத வர்களை அவுரங்கசீப்தான் அரசுப் பணிகளில் நியமித்திருந்தார் என்பதும், வசூலிக்கப்பட்ட வரியிலிருந்து ஏராளமான இந்து ஆல யங்களை அவர் கட்டி, பராமரித்தார் என்பதும் மறைக்கப்படும் உண்மை கள்.
- அறிவுக்கடல்