சென்னை, மே 4- சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்த போதிலும் மதிப்புக் கூட்டு வரி உயர்வால், தமிழ் நாட்டில் பெட்ரோல், டீசல் அதிகரித்துள்ளது. இதனால் மதிப்பு கூட்டு வரியை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தனித்தனியாக வெளியிட்டி ருக்கும் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் பெட்ரோல்-டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரி உயர்வடைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசு களும் உயர்கிறது. இந்த விலை ஏற்றம் மே 3 ஆம் தேதி நள்ளிரவு முதல் நடை முறைக்கு வந்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஸ்டா லின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,” கொரோனா காலத்திலும், தமிழக முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னால் முடிந்த ளவு மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார்.
ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தி லும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழ்நாடு அரசு உயர்த்தியிருப்பது சரியா? முறையா? நியாயமா? என்று கேள்வி எழுப்பி உள்ளதோடு வரி உயர்வை திரும்பப் பெற்று, மக்களுக்கு உதவியாக இருக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
“கொரோனா பேரிடர் மக்களின் இயல்பு வாழ்க்கையைச் சீரழித்து சிதைத்து உள்ள நேரத்தில் மத்திய அரசு போலவே தமிழ கத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்திருப்பது கண்டனத்துக்கு ரியது என்றும் கொரோனா பேரிடர் மக்களை வாட்டி வதைக்கும் போது தமிழக அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றுவது அநியாயம் என்பதால் வரி உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்” என்றும் வைகோ அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியி ருக்கிறார். “கோவிட் 19 நோய் பெருந்தொற்று பரவல் தடுப்புக்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்த ரவு அமலில் இருக்கும் போது வரியை உயர்த்திருப்பது எந்தவிதத்திலும் நியாய மாகாது.
கோவிட் 19 நோய் பெருந்தொற்று பாதிப்பு காரணமாக முடக்கம் செய்து, வேலை இழந்து வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தி இருப்பது ‘கழுத்தை முறிக்கும் சுமை தாங்கி நிற்பவன் தலையில் மேலும் பெரும் பாரத்தை ஏற்றும் ‘ இரக்க மற்ற செயலாகும்” இரா. முத்தரசன் தெரி வித்திருக்கிறார்.