ஆப்கானிஸ்தானின் மத்தியப் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் மத்தியப் பகுதியில் இன்று சாலையோரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 14 பேர் பலியாகி உள்ளனர். இதில் 7 பெண்கள். 5 பேர் சிறுவர், சிறுமியர்” என்று உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரெக் அரியன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்களைப் பார்க்கும்போது இதனை தலிபான்கள் நடத்தி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.