அயோத்தி ராமர் கோயில் கட்ட அமைக்கப்பட்ட ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து 6 லட்சம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது .
போலி கையெழுத்துக் கொண்ட காசோலைகள் மூலம் வங்கிக்கணக்கிலிருந்து தொகையை மோசடியாக எடுத்துள்ளனர். லக்னோவில் உள்ள 2 வங்கிகளிலிருந்து இந்தத் தொகை எடுக்கப்பட்டுள்ளது. 3 ஆவது முறையாக பணத்தை எடுக்கும்போதுதான் வங்கி அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய்க்கு தகவல் தெரிந்துள்ளது.
ராமர்கோவில் கட்டுவதற்காக ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை மூலம் 161 அடி உயரத்தில் 5 கோபுரங்களுடன் மிகப்பிரமாண்டமான முறையில் 3 ஆண்டுகளுக்குள் ராமர் கோவில் கட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பூஜையும் நடைபெற்று பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் வங்கிக் கணக்கில் மோசடி செய்து பணத்தை எடுத்தவருக்கு எதிராக அயோத்தி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.6 லட்சம் வரை மோசடி நடந்து உள்ளது.
கடந்த 1ம் தேதி ரூ.2.5 லட்சமும், 8ம் தேதி ரூ.3.5 லட்சமும் எடுக்கப்பட்டுள்ளது. 3வது முறையாக போலி காசோலை மூலமாக ரூ.9.86 லட்சம் எடுக்க முயற்சிக்கப்பட்ட போது, அதை உறுதி செய்வதற்காக அறக்கட்டளையின் செயலாளருக்கு வங்கி அதிகாரி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போதுதான், அறக்கட்டளையில் இருந்து யாருக்கும் காசோலை தரவில்லை என்பது தெரிந்தது. இது பற்றி கோத்வாலி காவல் நிலையத்தில் அறக்கட்டளையின் செயலாளரும், விஷ்வ இந்து பரிஷத் தலைவருமான சம்பத் ராய் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வங்கி கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது. உ.பி.யின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள மீரட் மாவட்ட கிராமங்களில் ராணா நேரில் சென்று இந்த வசூல் நடத்தி வந்துள்ளார். இதற்காக அவர் விஎச்பி ராமர் கோயில் நிதி எனும் பெயரில் போலியான ரசீதும் அச்சடித்து விநியோகித்துள்ளார்.
குறைந்தபட்சமாக ரூபாய் நூறு மற்றும் அதிகபட்சமாக ரூபாய் ஆயிரம் மட்டும் என நரேந்திர ராணா வசூல் செய்து வந்துள்ளார். இதில் பொதுமக்களுக்குச் சந்தேகம் வராமல் இருக்கும் பொருட்டு விஎச்பியின் பெயரில் ஒரு போலியான அலுவலகமும் மீரட்டில் திறந்து வைத்திருந்தார். இவர் மீது சந்தேகத்திற்கு இடையிலான தகவல்கள் மீரட்டின் விஎச்பி தலைவர்களுக்கு கிடைத்தன. இதனால், நரேந்திர ராணாவின் போலி அலுவலகம் சென்று நேரில் விசாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை, ரூ.23,000 வசூல் செய்துள்ள ராணா, கைதாகிவில்லை எனில் பல லட்சம் மோசடி செய்திருக்கும் வாய்ப்புகள் உள்ளன. இவரை போன்ற எவரிடமும் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் போலியான செயலா அல்லாது போலி போன்று நாடகமா என்ற சந்தேகம் எழுதிந்துள்ளது. இது குறித்து கால்வதுரையினர் விசாரித்து வருகிறார்கள்.