states

img

மாட்டிறைச்சி கடத்தியதாக பொய்ப் பழி பள்ளிச் சிறுவனை சுட்டுக் கொன்ற பசுக் குண்டர்கள்!

சண்டிகர், செப். 3 - ஹரியானாவில் பசுவைக் கடத்திச் செல்வ தாக பழி சுமத்தி, பிளஸ் 2 படிக்கும் பள்ளி  மாணவனை, பசுக் குண்டர்கள் துப்பாக்கி யால் சுட்டுக் கொலை செய்த அராஜகம் அரங்கேறியுள்ளது.

ஹரியானா மாநிலம் பரீதாபாத்தைச் சேர்ந்தவர் ஆரியன் மிஸ்ரா. 12-ஆம் வகுப்பு  படித்து வருகிறார். இவர், கடந்த 23-ஆம் தேதி தனது நண்பர்களான ஷங்கி மற்றும் ஹர்ஷித் ஆகியோருடன் காரில் உணவகம் சென்றுள்ளார்.

அப்போது, காரில் மாட்டிறைச்சி கடத்துவ தாக கூறி, ஆரியன் மிஸ்ராவின் காரை, சுமார் 30 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்ற பசுக் குண்டர்கள், தில்லி - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் கத்புரி சுங்கச்சாவடி அருகே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

இதில், பல்வால் பகுதியில் உள்ள கத்புரி  சுங்கச்சாவடியின் தடுப்பில் மோதி ஆரிய னின் கார் விபத்துக்குள்ளானது. அந்த காரின் மீது பசுக் குண்டர்கள் துப்பாக்கியால் சுட்டதில், ஆரியனின் நெஞ்சுப் பகுதியில் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

தற்போது, இந்த சம்பவத்தைச் தொடர்ந்து, பசுக் குண்டர்கள் கும்பலைச் சேர்ந்த அனில் கௌசிக், வருண், கிருஷ்ணா, ஆதேஷ் மற்றும் சவுரவ் ஆகியோரை கைது  செய்து, அவர்களிடமிருந்து, துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

ஹரியானாவில் கடந்த வாரம் தான், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சபீர் மாலிக்  என்ற புலம்பெயர் தொழிலாளி மாட்டிறைச்சி  சாப்பிட்டதாகக் கூறி, அவரை பசுக் குண்டர்கள் கும்பலைச் சோ்ந்த 5 போ் அடித்துக்கொலை செய்தனர்.

பழைய பொருள்களை சேகரித்து விற்பனை செய்யும் மாலிக்கிடம், தங்களி டம் காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்பனைக்கு இருப்பதாக கூறி அங்குள்ள கடைக்கு ஏமாற்றி வரவழைத்துத் தாக்கிய அவர்கள், பின்னர் சபீா் மாலிக்கை வேறு ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று மீண்டும் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த னர். அதற்குள் மற்றொரு கொலை வெறி யாட்டம் நடந்துள்ளது.