states

img

தோல்வி பயத்தால் வேட்புமனுவை வாபஸ் பெற்ற பாஜக வேட்பாளர் ஹரியானாவில் உடைந்தது பகுஜன் சமாஜ் கூட்டணி

சண்டிகர் ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் 5 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சா ரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில், திடீர் திருப்பமாக வேட்பு மனுவை திரும்பப் பெற கடைசி நாளான திங்க ளன்று சிர்சா சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ரோஹ்தாஷ் ஜங்ரா, தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். தொடர்ந்து ஹரி யானா பாஜக தலைவர் அசோக் தன்வார், “சிர்சா தொகுதியில் போட்டியிடும் முடிவை பாஜக வாபஸ் பெற்றுள்ள நிலையில், அத்தொகுதியில் போட்டியிடும் ஹரியானா லோகித் கட்சியின் தலைவரான கோபால் காந்தா வை பாஜக ஆதரிக்கும்” என அறிவித்தார். தோல்வி பயத்தால் சிர்சா தொகுதி வேட்பா ளரை  வாபஸ் பெற்றுள்ளதாக தங்கள் கட்சியின் முடிவுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.

உடைந்தது பகுஜன் சமாஜ் கூட்டணி

ஹரியானா லோகித் - இந்திய தேசிய லோக் தளம் - பகுஜன் சமாஜ் ஆகிய 3 கட்சிகள் கூட்டணி அமைத்து, 90 தொகுதிகளிலும் இந்த கூட்டணி யின் வேட்பாளர்கள் வேட்புமனு செய்தனர். தேர்தல் அறிவித்த நாள் முதல் ஹரியானா லோகித், இந்திய தேசிய லோக் தளம் கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜக எவ்வளவோ முயற்சித்தும் பலனளிக்கவில்லை. ஹரியானா லோகித் கட்சிக்கு ஜாட் இன மக்களின் வாக்கு கள் கணிசமாக இருப்பதால், வேட்பாளர் வாபஸ் மூலம் அக்கட்சியை தங்கள் பக்கம் இழுக்க அக்கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக அறிவித்துள்ளது. ஹரியானா லோகித் கட்சி பாஜகவுடன் இணைந்ததால் கூட்டணியை கலைப்பது தொடர்பாக அடுத்தக்கட்ட முடிவு கள் எடுக்கப்படும் என இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவர் அபய் சௌதாலா அறிவித்துள்ளார். இதன் மூலம் ஹரியானாவில் பகுஜன் சமாஜ் கூட்டணி உடைந்தது என செய்தி கள் வெளியாகி வருகின்றன.