சண்டிகர் 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்திற்கு அக்டோபர் 5 அன்று ஒரே கட்ட மாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்த லுக்கான 67 பேர் கொண்ட முதற் கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த வாரம் பாஜக வெளியிட்டது. இந்த வேட்பாளர் பட்டியலில் தாங்கள் இடம் பெறாததை கண்டித்து பாஜகவின் மாநில துணைத் தலைவர் சந் தோஷ் யாதவ் உட்பட அமைச்சர் கள், எம்எல்ஏக்கள் என 20க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகினர். இது பாஜகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டிய லுக்கும் எதிர்ப்பு தெரிவித்து முக்கிய தலைவர்கள் பலர் பாஜக வை விட்டுஓட்டம் பிடித்து வரு கின்றனர். செவ்வாயன்று 21 பேர் கொண்ட 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜகவெளியிட்டது. இந்த பட்டியலில் 2 அமைச்சர்கள் உட்பட 6 எம்எல்ஏக்களுக்கு மீண் டும் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அமைச் சர்கள், எம்எல்ஏக்கள் உட்பட 8 மூத்த தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகல் முடிவை எடுத்துள் ளதாக தகவல் வெளியாகியுள்ளது.