states

img

பாஜக ஆளும் உ.பி.யில் பஞ்சாங்கத்தைக் கடைப்பிடிக்குமாறு போலீசாருக்கு உத்தரவு!

லக்னோ, ஆக. 23 -  உத்தரப் பிரதேச காவல்துறையினர், பஞ்சாங்கத்தைக் கடைப்பிடிக்குமாறு அம்மாநில டிஜிபி அறிவுறுத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நவீன அறிவியல் வளராத காலத்தில், அன்றைக்கு இருந்த அறிவுவளர்ச்சியின் அடிப்படையில் பஞ்சாங்கம் உருவாக் கப்பட்டது. இன்று விஞ்ஞானம் வளர்ந்து செவ்வாய்க்கிரகம் வரை சென்றுவிட்டது. ஆனால், இன்றைய காலத்திலும் பழைய நடைமுறைகளை பின்பற்றுபவர்களை பழைய பஞ்சாங்கம் என்பார்கள். ஆனால், சாமியாரை முதல்வ ராக கொண்டிருக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் டிஜிபி விஜயகுமார், அனை த்து மாவட்ட காவல்துறையினருக்கும் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில், அமாவாசை நாளில், குற்ற நிகழ்வுகளை தீவிரமாக கண்காணிக்கு மாறும், அமாவாசை நாளுக்கு முன்பு,  குற்றங்களைத் தடுக்க அதிக முன்னேற் பாடுகளை செய்துகொள்ளுமாறும் வலியுறுத்தியிருக்கிறார். “பொதுவாக குற்றச்சம்பவங்கள் அமாவாசைக்கு ஒரு வாரம் முன்பும், அமா வாசைக்கு ஒரு சில நாள்களுக்கு பின்பும் தான் அதிகமாக நிகழும். எனவே, அதற்கேற்ப, மாதந்தோறும் அந்த நாள்க ளில் காவல்துறை கண்காணிப்பை அதி கரிக்குமாறு” கூறியிருக்கிறார். “ஆகஸ்ட் 1 அன்று பவுர்ணமி. அன்றி லிருந்து ஒரு வாரத்துக்கு இரவில் வெளிச் சம் அதிகம் இருக்கும். குற்றவாளிகள் நட மாட்டம் குறைவாக இருக்கும். ஆகஸ்ட் 16 அன்று அமாவாசை. எனவே, அதற்கு ஒரு வாரம் முன்னதாக வெளிச்சம் குறையும். அடுத்த 3 நாட்களுக்கும் வெளிச்சம் குறை வாக இருக்கும். எனவே, அமாவாசை வரும் நாள்களைக் கருத்தில் கொண்டு, அதற் கேற்ப காவல்துறையினர் குற்றங்களைத் தடுத்தல், கண்காணிப்பை அதிகரித்தல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்” என்று அறிவுறுத்தி(?) உள்ளார். அத்துடன் பொதுமக்களுக்கும் குறுஞ்செய்தி அடிப்படையில் தகவல் அனுப்பியுள்ளார்.

அதில், காவல்துறை யினர் மட்டுமன்றி, பொது மக்களும், அமாவாசை போன்ற நாள்களுக்கு முன்பு ஒரு வாரமும், பின்பு ஒரு சில நாள்களும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி யிருக்கிறார்.  மிகப்பெரிய கொலை மற்றும் கொள்ளைக் கும்பல்கள், அமாவாசை யை தேர்ந்தெடுத்து குற்றங்களில் ஈடு படுவார்கள் என்றும் டிஜிபி தெரிவித்துள் ளார். அமாவாசையில் பிறக்கும் குழந்தைகள் திருடர்களாக வருவார்கள் என்று ஒரு மூடநம்பிக்கை சமூகத்தில் இருந்தது. திரைப்படங்களில் கூட அதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால், இந்த மூடநம்பிக்கைகள் எல்லாம் நவீனக் கல்வி மூலம் பெருமளவு உடைத்தெறி யப்பட்ட சூழலில், பாஜக ஆட்சி நடத்தும் உ.பி. மாநிலத்தில் பஞ்சாங்கத்தைக் கடைப்பிடிக்குமாறு காவல்துறையின ருக்கும், பொதுமக்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பது, சமூகத்தை பின்னோக்கி இழுப்பதாகும். உத்தரப்பிரதேச டிஜிபி-யின் சுற்ற றிக்கைக்கு அந்த மாநில காவல்துறைக்கு உள்ளேயே முணுமுணுப்பு எழுந்துள்ளது. முன்பெல்லாம் அமாவாசையை அடிப்ப டையாகக் கொண்டு காவல்துறை சார்பில் மாதந்தோறும் காலண்டர் வெளியிடப்படும். அமாவாசை நாள்களில் காவலர்களுக்கு விடுமுறை வழங்கப்படாது. ஆனால், இவையெல்லாம் மிகவும் பழமையான நடைமுறை என முன்னாள் காவல்துறை அதிகாரிகளே கருத்து தெரிவித்துள்ளனர்.