states

img

கன்வார் யாத்திரையில் சிவனை விட “மோடிக்கு பெரிய சிலை”

லக்னோ மக்களவைத் தேர்தல் பிரச்சா ரத்தில்,”நான் சாதாரண மனி தன் இல்லை. கடவுளின் அவதாரம்” எனக் கூறி வகுப்புவாத கருத்துக்களுடன், தன்னை ஒரு கட வுளாக கூறி பிரச்சாரம் மேற்கொண்டார். மோடியின் இந்த பேச்சிற்கு பிறகு பாஜகவினர் மோடியை கடவுளாக புகழ்பாட ஆரம்பித்தனர்.

இந்நிலையில், வடமாநிலங்க ளில் “சிவன் யாத்திரை” என அழைக் கப்படும் கன்வார் யாத்திரையில், சிவன் சிலையுடன் பிரதமர் மோடி யின் சிலையை தோளில் ஏந்தி இந்துத் துவா குண்டர்கள் யாத்திரை மேற்கொண்ட சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. பாஜகஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாக்பத்தை சேர்ந்த உபேந்திர தோமர், சோனு தியாகி ஆகிய 2 பேரும் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரிலுள்ள கங்கை நதிக்கு  வந்த பொழுது கடவுள் சிவன் மற்றும் மோடி சிலையுடன் வந்து கங்கை நதியில் நீராடினர். 

அடுத்து தில்லியில் மோடியுடன் ஷூட்டிங்...

உபேந்திர தோமர், சோனு தியாகி கொண்டு வந்த “மோடி சிலை” கடவுள் சிவன் சிலையை விட மிகப்பெரியது என்ற நிலையில், கங்கை நீரில் நீராடிய பின்பு இருவரும் தில்லி நோக்கி பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தனக்கு காவடி எடுத்த உபேந்திர தோமர், சோனு தியாகியுடன் மோடி ஷூட்டிங் ஷாட் எடுக்கப்போவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஒன்றும்  வெளியாகியுள்ளது.

மோடி சிலையை கண்டுகொள்ளாத  உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மக்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத்தில் இருந்து உபேந்திர தோமர், சோனு தியாகி ஆகிய இருவரும் மோடி சிலையுடன் 183 கிமீ தூரம் நடைபயணம் மேற்கொண்டு ஹரித்வாரை (உத்தரகண்ட்) அடைந்துள்ளனர். ஆனால் அவர்கள் வைத்து இருந்த மோடி சிலைக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மக்கள் எவ்வித வரவேற்பும் அளிக்கவில்லை. மோடி சிலையை யாரும் கண்டு கொள்ள வில்லை. குறிப்பாக மோடி சிலைக்கு பின்னால் மற்ற கன்வார் யாத்திரை பக்தர்கள் யாரும் பின்தொடரவில்லை. தனியாக கழன்று கடந்து சென்று ஓடிவிட்டார்கள். உபேந்திர தோமர், சோனு தியாகிக்கு துணையாக மேலும் 3 பேர் மட்டுமே அவர்களின் நடைபயணத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.