states

img

14 மாதங்களில் 9 பெண்களை கொலை செய்த குற்றவாளி கைது

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பரேலி பகுதி யில் கடந்த ஒன்றரை ஆண்டு களாக தொடர்ச்சியாக 9 பெண்கள் மர்மமான முறையில் கழுத்து நெரிக்கப்பட்டு அடுத்தது உயிரிழந்தனர். இதை கொலை வழக்காக பதிவு செய்து உத்தரப் பிரதேச போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்ட நிலையில், ஆகஸ்ட் 9 அன்று இந்த கொலை விவகாரம் தொடர்பாக குல்தீப் (35) என்பவரை போலீ சார் கைது செய்தனர். விசாரணையில், தனது மனைவி பிரிந்து சென்றதன் கார ணமாகவே பெண்களை கழுத்தை  நெரித்து கொன்றதாக ஒப்புக்கொண்டுள் ளார். 

அரசின் அலட்சியத்தால் பறிபோன 8 உயிர்

முதல் கொலை நடந்த பொழுதே பரேலி மக்கள் ஒரு சில ஆதாரத்துடன் குல்தீப் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ள னர். ஆனால் போலீசார் அலட்சியமாக இருந்ததால் மேலும் 8 பேரை குல்தீப் கொலை செய்துள்ளார்.