காங்கிரஸ் ஆட்சி காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை ராஜஸ்தான் பாஜக அரசு கலைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிகாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஆர்எல்பி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் மாவட்டங்கள் கலைத்தது தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தின. பாஜக அரசின் முடிவுக்கு எதிராக ஒரு பெரிய இயக்கம் தொடங்கி மாநிலம் முழுவதும் பிரம்மாண்ட போராட்டம் நடத்த இந்தியா கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.