states

img

ஜெய்ப்பூரில் பதற்றம் பாஜக ராஜ்புத் சமூக தலைவர் சுட்டுக்கொலை

ராஜஸ்தான் மாநிலத் தில் ராஜ்புத் சமூகத் தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்  கின்றனர். ராஜ்புத் சமூகத் திற்கு இடஒதுக்கீடு கோரி கடந்த 2006இல் கர்னி சேனா  என்ற அமைப்பை லோகேந்திர சிங் தொடங்கினார். அதன் பிறகு லோகேந்திர சிங்கால் கர்னி சேனாவின் தலைவராக சுக்தேவ் சிங் கோகமேடி நிய மிக்கப்பட்டார். 

இடஒதுக்கீடு கோரிக்கை கள் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கர்னி  சேனா 4 பிரிவாக பிரிந்தது. எனி னும் ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா பிரிவே உண்மை யான கர்னி சேனா என கருதப்படும்  நிலையில், அப்பிரிவின் தலை வர் சுக்தேவ் சிங் கோகமேடி யை செவ்வாயன்று காலை  மர்ம நபர்கள் சுட்டுக்கொன்ற னர். சுக்தேவ் சிங்கின் ஆதர வாளர்கள் 2 பேர் காயமடைந்த னர். இந்த சம்பவத்திற்கு பின்  னர் ராஜ்புத் சமூக மக்கள்  ஜெய்ப்பூரில் ஒன்று கூடியதால்  அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

அரசியலா? சாதிப் பிரச்சனையா?
கர்னி சேனா தலைவர் லோகேந்திர சிங் காங்கிரஸ்  கட்சியுடன் நெருக்கமாக இருந்  தார். ஆனால் ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா தலை வர் சுக்தேவ் சிங் பாஜகவுடன்  நெருக்கமாக இருந்துள்ளார். பாஜகவுடன் இணைந்து இருப்  பதற்கு கர்னி சேனாவின் மற்ற  பிரிவுகள் கடும் எதிர்ப்பு தெரி வித்தன. சமீபத்தில் நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் சுக்தேவ் சிங் பாஜகவிற்கு ஆத ரவாக பிரச்சாரம் செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது. ராஜஸ்தான் தேர்தல் முடிவு  வெளியாகிய உடன் இந்த  கொலைச் சம்பவம் அரங்கேறி யுள்ளதால் அரசியல் ரீதியி லான பிரச்சனை காரணமாக சுக்தேவ் சிங் சுட்டுக் கொல்  லப்பட்டிருக்கலாம் என்றும்  ஜாட் இன தலைவர்களுக்கும் சுக்தேவ் சிங்கிற்கும் சமீபகால மாக இருந்த மோதல் போக்  கால் இந்த கொலை அரங்கேறி  இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.