states

img

மும்பையில் தொலைக்காட்சி நடிகைக்கு பாலியல் வன்புணர்வு - வழக்கு பதிவு  

மும்பையில் தொலைக்காட்சி நடிகைக்கு பாலியல் வன்புணர்வு செய்ததாக எழுத புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் திருமண செய்து கொள்வதாக சொல்லி 26 வயது தொலைக்காட்சி நடிகையை பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒரு நடிகை இயக்குநருக்கு எதிராக மும்பை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில், இயக்குனர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக மும்பை நகரில் உள்ள பல்வேறு இடங்களில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக  குறிப்பிட்டிருந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளதாக திங்களன்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடிகை  வெர்சோவா காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, கடந்த வாரத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட நடிகை கடந்த 2 வருடங்களில் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி பழகி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், அவர் அந்த நடிகையை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார். ஆனால், அதனை பின்னர் மறுத்துள்ளார் என்பதில் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பிரச்சனை குறித்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (வன்புணர்வு) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட இயக்குனர் கைது செய்யப்படவில்லை. இந்த, வழக்கு குறித்து காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

;