நாட்டிலேயே மிக குறைந்த வாக்கு வித்தியாசத் தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்குரியவர் பாஜக கூட்டணிக் கட்சியான சிவசேனாவின் (ஷிண்டே) ரவீந் திர வெய்க்கர் ஆவார். மகா ராஷ்டிரா மாநிலம் மும்பை வட மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திர வெய்க்கர், இந் தியா கூட்டணி கட்சியான சிவ சேனாவின் (உத்தவ்) வேட்பாள ரான அமோல் கஜானன் கீர்த்தி கரை வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
இவிஎம் வாக்கு எண் ணிக்கை முடிவில் அமோல் கஜா னன் கீர்த்திகர் ஒரு வாக்கு வித்தி யாசத்தில் முன்னிலை இருந்த நிலையில், மின்னணு முறை யில் எண்ணப்பட்ட தபால் வாக்கு எண்ணிக்கை முடிவில் கீர்த்தி கரை விட வெய்க்கர் 49 வாக்கு கள் கூடுதலாக பெற்று, 48 வாக்கு கள் வித்தியாசத்தில் சிவசேனா வின் (ஷிண்டே) ரவீந்திர வெய்க் கர் வெற்றி பெற்றதாக அறிவித் தது தேர்தல் ஆணையம்.
கடைசிச் சுற்று வாக்கு எண் ணிக்கை தாமதம், தபால் வாக்கு எண்ணிக்கை முடிவு, சிசிடிவி தரவுகளை 48 வாக்குகள் வித்தி யாசத்தில் வீழ்ந்த சிவசேனா (உத்தவ்) வேட்பாளர் அமோல் கஜானன் கீர்த்திகருக்கு வழங் காதது என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
இதுபோக ரவீந்திர வெய்க்க ரின் வெற்றி குறித்து மூத்த பத்தி ரிகையாளர் பூனம் அகர்வால் ஆதாரத்துடன் சந்தேகம் எழுப் பிய நிலையில், இரண்டு நாட்க ளுக்கு முன்பு மும்பையின் மிட்- டே நாளிதழ்,”மும்பை வட மேற்கு தொகுதியில் இ.டி.டி.பி. பி.எஸ் முறையில் பதிவான தபால் வாக்குகள் மூலம் முறை கேடு சம்பவம் அரங்கேற்றப் பட்டுள்ளது. வெற்றி பெற்ற ரவீந் திர வெய்க்கரின் உறவினரான மங்கேஷ் பண்டில்கர் மற்றும் தேர்தல் ஆணைய பணியாளர் தினேஷ் ராவ் ஆகிய இருவரும் ஒடிபி மூலம் மின்னணு தபால் வாக்குகள் மூலம் முறைகேடு செய்தனர்” என செய்தி வெளி யிட்டது.
இந்த செய்தியை தொடர்ந்து ரவீந்திர வெய்க்கரின் வெற்றி யில் சந்தேகம் இருப்பதாகவும், பெரியளவு முறைகேடு சம்பவம் நடந்துள்ளதாக இந்தியா கூட்ட ணியில் அங்கம் வகிக்கும் சிவ சேனா (உத்தவ்) வேட்பாளரான அமோல் கஜானன் கீர்த்திகர் உள்ளிட்ட 3 பேர் அளித்த புகா ரின் பேரில் மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
இந்நிலையில், இந்த விவகா ரம் தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித் துள்ளனர். அதில், “ப்ளூடூத் உள் ளிட்ட வயர்லெஸ் இணைப்பு கள் கிடையாது என்பதால் மேற்கு நாடுகள் போல இந்தியாவின் இவிஎம் இயந்தி ரம் இணைய இணைப்பை கொண்டிருக்கவில்லை. எனவே இந்தியாவின் இவிஎம் இயந்தி ரங்கள் ஹேக்கிங் சாத்தியங்க ளுக்கு முற்றிலும் வாய்ப்பில்லை” எனக் கூறினர்.
மேலும், இவிஎம் இயந்தி ரங்கள் மீதான ஒடிபி சர்ச்சை தொடர்பாக செய்தி வெளியிட்ட மும்பையின் மிட்-டே (MID- DAY) நாளிதழுக்கு எதிராக நோட் டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வும், அவதூறு வழக்கு தொடர இருப்பதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறிய தாக தகவல் வெளியாகியுள் ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு சர்ச்சைக்கு போதுமான அளவு விளக்கம் அளிக்காமல், செய்தி வெளி யிட்ட மிட்-டே (MID-DAY) நாளித ழுக்கு எதிராக தேர்தல் ஆணை யம் நடவடிக்கையை தொடங்கி யுள்ளது கடும் சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.