states

ராகுலின் நடைபயணத்தை தடுப்பதற்காக மோடி அரசு கொரோனாவை பரவ விட்டுள்ளது!

மும்பை, டிச.22- ராகுல் காந்தியின் நடைபயணத்தை தடுத்து நிறுத்துவதற்காகவே, ஒன்றிய அரசு கொரோனா வைரஸை பரவ விட்  டுள்ளதாக சிவசேனா குற்றம் சாட்டி யுள்ளது. கொரோனா பரவலைக் காரணம் காட்டி ராகுல் காந்தியின் நடைபய ணத்தை ரத்து செய்யுமாறு ஒன்றிய சுகா தாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட வியா கடிதம் எழுதிய நிலையில், சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) தனது  அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா’ வில் காட்டமான விமர்சனத்தை வைத்  துள்ளது. அதில், “ராகுல் காந்தி தனது ஒற்  றுமை நடைபயணத்தின் 100 நாட்களை நிறைவு செய்துள்ளார். அவருக்கு செல்  லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆத ரவு பெருகிக் கொண்டே வருகிறது. ராகுல் காந்திக்கு மக்கள் ஆதரவு அதி கரிப்பதை பார்த்தும் பாஜக-வினரும், பிரதமர் நரேந்திர மோடியும் பயப்படு கின்றனர். அதனால்தான், ராகுலின் நடைபயணத்தை தடுத்து நிறுத்து வதற்கான செயல்களில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. எதுவும் பலன் அளிக்  காததால் கடைசி அஸ்திரமாக கொரோனா  வைரஸை ஒன்றிய அரசு பரப்பி விட்டுள்  ளது. அரசின் செயல்களை பார்க்கும் போது இப்படித்தான் தோன்றுகிறது. கொரோனா அச்சத்தால்தான் ஒன்  றிய அரசு இவ்வாறு கூறுகிறது என்றே  வைத்துக் கொண்டாலும், 2 ஆண்டு களுக்கு முன்பு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது அன்றைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை குஜராத்துக்கு அழைத்து, லட்சக்கணக்கானோரை கூடச் செய்தது யார்? இதே ஒன்றிய அரசுதானே. அப்  போது உங்கள் (மோடி அரசின்) கொரோனா  விழிப்புணர்வு எங்கு போனது?” என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

இதேபோல ஐக்கிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமாரும் மோடி அரசை விமர் சித்துள்ளார். அவர்கள் (ஒன்றிய பாஜக அரசு) கொரோனாவில் முதலில் ஏன்  பின்வாங்கினார்கள்? இப்போது காங்கி ரசார் நடைபயணம் போகிறபோது எத னால் திடீரென விழிப்புடன் இருக்கிறார்  கள் என்பதை அறிந்தாக வேண்டும். நடைபயணத்திற்கு ஏன் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? அவர்கள் மட்டும் ஊர்வலங்கள் எல்லாம் நடத்து கிறார்களே, எப்படி? என கேள்வி எழுப்பி யுள்ளார். ‘ஜன் ஆக்ரோஷ் யாத்திரை’யை ரத்து செய்தது பாஜக! கொரோனா பரவல் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, ராகுல் காந்தி அவ ரது இந்திய ஒற்றுமை நடைபய ணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று  ஒன்றிய பாஜக அரசு கடிதம் எழுதியது. இது கடும் விமர்சனங்களுக்கு உள்ளா னது.  ராகுல் காந்தியின் பயணத்தை ரத்து  செய்யக் கோரும் ஒன்றிய பாஜக அரசு, ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நடத்திவரும் ‘ஜன் ஆக்ரோஷ் யாத்திரை’யையும், கர்நாடகத்தில் நடத்தி வரும் பிரச்சாரத்தையும் ஏன் நிறுத்தவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்நிலையில், ராஜஸ்தானில் பாஜக மூத்த தலைவர் சதீஷ் புனியா மேற்கொண்டு வந்த ஜன் ஆக்ரோஷ் யாத்திரையை ரத்து செய்வதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. இந்த யாத்  திரையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொள்வதாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.