மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு தர கடந்த 2018-இல் மகாராஷ்டிரா அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இதுவெறும் அறிவிப்பாகவே இருந்த நிலையில், மராத்தா ஆர்வலரான மனோஜ் ஜாரங்கே 3-ஆவது முறையாக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தார். அறிவிப்பின்படி ஜனவரி 20-ஆம் தேதி முதல் மும்பையை நோக்கி நடை பயணத்தை தொடங்கிய நிலையில், சனி யன்று காலை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மனோஜ் ஜாரங்கேவை சந்தித்து மராத்தா இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிப்பதாக கூற, இந்த உண்ணாவிரதப் போராட்டம் மீண்டும் முடிவுக்கு வந்துள் ளது.
மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த 6 மாத காலமாக மூன்று முறை போராட்டம், வாபஸ் என தொடர் சம்ப வம் அரங்கேறி வருவதால், இந்த விவ காரத்தில் வேறு ஏதெனும் அரசியல் உள் ளதா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ள நிலையில், மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக மகாராஷ்டிரா பாஜக கூட் டணி கட்சிகளுக்குள் மோதல் ஆரம் பித்துள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள தேசிய வாத காங்கிரஸ் (அஜித்) ஓபிசி தலை வரான சாகன் புஜ்பால்,”மராத்தா போராட் டம் வெறும் கண்துடைப்பு. மராத்தாக்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள்.
இந்த விவகாரத்தில் ஓபிசிகளுக்கும் அநீதி இழைக்கப்படுகிறது. அரசின் முடி வினை எதிர்த்து நீதிமன்றத்தை நாடு வதா இல்லையா என்று நாங்கள் முடி வெடுப்போம்” என எதிர்ப்பு தெரிவித்தார். இது அவரது தனிப்பட்ட கருத்து என கூறப்பட்ட நிலையில், மராத்தா இடஒதுக் கீடுக்கு தேசியவாத காங்கிரஸ் (அஜித்) கட்சி அதிரகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரி வித்துள்ளதாக தகவல் வெளியாகியுள் ளது.