states

img

இந்தியப் பங்குச் சந்தைகளுக்கு 4-ஆவது நாளாக பலத்த அடி!

மும்பை, ஜன.20- இந்திய பங்குச் சந்தைகள் வர்த் தக வாரத்தின் நான்காவது நாளான வியாழனன்றும் சரிவைக் கண்டுள் ளன. முந்தைய நாள் வர்த்தக நேர  முடிவில், 60 ஆயிரத்து 098 புள்ளி களில் நிலைகொண்டிருந்த மும்பைப் பங்குச் சந்தைக் குறியீடான ‘சென் செக்ஸ்’, வியாழனன்று காலை 60 ஆயிரத்து 045 புள்ளிகளில் வர்த்த கத்தை துவங்கியது. ஆனால், வர்த் தக நேர முடிவில் சுமார் 634.20 புள்ளி கள் சரிந்து 59 ஆயிரத்து 464 புள்ளி களுக்கு இறங்கியது. அதேபோல முந்தைய புதனன்று வர்த்தக நேர முடிவில் 17 ஆயிரத்து 938 புள்ளிகளில் நிலைகொண்டிருந்த தேசியப் பங்குச் சந்தைக் குறியீடான ‘நிப்டி’, வியாழனன்று 17 ஆயிரத்து 943 புள்ளிகளில் வர்த்தகத்தை துவங்கி, பின்னர் 181.40 குறைந்து, வர்த்தக நேர முடிவில் 17 ஆயிரத்து 757 புள்ளிகளுக்கு சரிந்தது.  அமெரிக்க பெடரல் வங்கி எதிர் பார்த்ததை காட்டிலும் முன்கூட்டியே வட்டி விகிதத்தை உயர்த்தக் கூடும் என்ற தகவல் போன்ற காரணங்க ளால் இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து, கடந்த சில அமர்வு களாகவே தொடர்ந்து அந்நிய நிறு வன முதலீடுகள் அதிகளவில் வெளி யேறி வருகின்றன. இது பங்குச் சந்தை களின் சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.