states

img

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாஜக கூட்டணி அரசு

மகாராஷ்டிரா மாநிலம் பத்லா பூரில் அருகே உள்ள மழ லையர் பள்ளியில் படிக்கும் 4 வயது நிரம்பிய 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்திற்கு கண்டனம் தெரி விக்கும் வகையில்,  “இந்தியா” மற்றும் எம்விஏ (மகா விகாஸ் அங்காடி)  கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்), சிவசேனா (உத்தவ்) கட்சிகள் உள்ளிட்ட சனி யன்று மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தன.

இந்த முழுஅடைப்பு போராட் டத்திற்கான அனைத்து ஏற்பாடுக ளையும் எம்விஏ கூட்டணிக் கட்சி யினர் வியாழனன்றே தொடங்கிய நிலையில், வெள்ளியன்று பாஜக சார்பில் மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப் பட்டது. அந்த வழக்கில்,”திடீரென அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டம் நடத்துவது மக்களின் இயல்புநிலையை பாதிக்கும்” என கூறப்பட்டுள்து. இந்த வழக்குத் தொடர்பாக மும்பை தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா தலைமையிலான அமர்வு, “திடீரென அரசியல் கட்சிகள் மகா ராஷ்டிராவில் முழுஅடைப்பு போராட்டம் மக்களை பாதிக்கும். இது சரியானது அல்ல. அத னால் இந்த முழுஅடைப்பு போராட்டத்திற்கு தடை விதிக்கப் படுகிறது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அடுத்த வாரம் (செவ்வாயன்று) நடைபெறும்” என உத்தரவிட்டது.

வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்

நீதிமன்ற உத்தரவை ஏற்பதாக எம்விஏ கட்சிகள் கூட்டாக அறி வித்த நிலையில், தொடர்ந்து எம்விஏ கூட்டணியின் ஒருங்கி ணைப்பாளர்களில் ஒருவரான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே,”பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மாநில அரசு “பாலியல் குற்றவாளிகளுடன்” நிற்கிறது. அதனால் தான் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு வாங்கியுள்ளது. முழுஅடைப்புப் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டாலும், மாநி லம் முழுவதும் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்” என அவர்  கூறினார்.

திணறியது மும்பை, புனே

தொடர்ந்து சனியன்று காலை மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்க ளில் எம்விஏ கட்சிகள் பத்லாபூர் பாலியல் வன்கொடுமை சம்ப வத்தை கண்டித்து வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம் நடத்தி னர். மாநில தலைநகர் மும்பை யில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்,  சிவசேனா ஆகிய 3 கட்சிகளின் எம்.பி.,க்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயி ரக்கணக்கானோர் வாயில் கருப்புத் துணி கட்டி திரளாக போராட்டத்தில் பங்கேற்றனர். மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்க ளில் ஒன்றான புனேவில் தேசிய வாத காங்கிரஸ் மூத்த தலைவர் சரத் பவார், சுப்ரியா சுலே எம்.பி., தலைமையில் நடைபெற்ற போராட்டத்திலும்  ஆயிரக்கணக்கா னோர் பங்கேற்று பாலியல் குற்ற வாளிகளை பாதுகாக்கும் பாஜக கூட்டணி அரசு என முழக்கங்களை எழுப்பினர். எம்விஏ கூட்டணிக் கட்சிகளின் போராட்டத்தால் மும்பை, புனே பகுதிகளில் கடு மையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குற்றவாளிகள் ஷிண்டே சிவசேனாவைச் சேர்ந்தவர்கள்

மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் மகாராஷ்டிர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடேட்டிவார் (காங்கிரஸ்) பேசுகையில்,”மகாராஷ்டிராவில் சட்டம்  ஒழுங்கு என்ற ஒரு பிரிவே இல்லாத நிலைமை உள்ளது.  அத னால் தான் மாநிலத்தில் பெண்கள்,  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரு கின்றன. முதல்வர், துணை முதல் வர் நாற்காலிகளில் இருப்பவர்கள் அந்த பதவிக்கு தகுதியானவர்கள் இல்லை என்பதால், குற்றவா ளிகளுக்கு சட்டத்தின் மீது பயமே இல்லை. பத்லாபூர் சிறுமி பாலி யல் வன்முறை சம்பவம் மகா ராஷ்டிராவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கூட்டணி முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு அரசு நிகழ்ச்சிகளில் உரையாற்ற நேரம் உள்ளது. ஆனால் பாலியல் குற்ற சம்பவத்தால் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்களைச் சந்திக்க அவருக்கு நேரமில்லை. சிவசேனாவின் தலைவரான முதல்வர் ஷிண்டே தானே பகுதி யின் சக்திவாய்ந்த தலைவர். ஆனால் தானேவில் இதுபோன்ற குற்றங்கள் அதிகம் நடக்கின்றன, குற்றவாளிகள் சிவசேனா (ஷிண்டே) ஆதரவாளர்கள். அவர் களின் தலைவர் உயர் பதவியில் இருப்பதால், அவர்களுக்கு எந்த பயமும் இல்லை என்று தெரி கிறது” என குற்றம் சாட்டினார்.