states

img

மும்பையில் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு பிரம்மாண்ட அஞ்சலி பொதுக்கூட்டம் அசோக் தாவ்லே, சரத்பவார் உள்ளிட்டோர் பங்கேற்பு

மும்பை மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பை நாரி மன் பாயின்ட்டில் உள்ள  ஒய்.பி.சவான் அரங்கத்தில்  செப்டம்பர் 24 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான மறைந்த தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு நினை வேந்தல் பொதுக்கூட்டம் நடை பெற்றது. மகா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணிக் கட்சிகள் (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்), சிவசேனா (உத்தவ்) இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த பொதுக்கூட்டம், தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறை வின் 12ஆம் நாள் நினைவஞ்சலி யாக அமைந்தது. மக்களால் நிரம்பி வழிந்த ஒய்.பி.சவான் அரங்கத்தில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து,  பல அமைப்புகளைச் சேர்ந்தவர் களும் பங்கேற்ற இந்த உணர்வுப் பூர்வமான கூட்டம் ஆழமான இழப்பு உணர்வை பிரதிபலித்தது

நிகழ்வின் தொடக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மகாராஷ்டிரா மாநிலக் குழு தயாரித்த 10 நிமிட ஆவணப்படத்துடன் நினை வேந்தல் பொதுக்கூட்டம் தொடங்கி யது. இந்த ஆவணப்படம் சீத்தா ராம் யெச்சூரியின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளை சித்தரித் தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு  உறுப்பினர்கள் டாக்டர்.அசோக் தாவ்லே, நிலோத்பல் பாசு ஆகி யோர் தங்கள் அறிமுக மற்றும் நிறைவு உரைகளில் சீத்தாராம் யெச்சூரி பல்வேறு துறை களில் ஆற்றிய சிறப்பான பங் களிப்புகளை எடுத்துரைத்தனர்.

தலைவர்களின் அஞ்சலி

பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த தலை வர்கள் தங்கள் அஞ்சலியை செலுத்திய நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் மாநில தலைவர் நானா  படோலே, சிவசேனா (உத்தவ்) எம்.பி., அரவிந்த் சாவந்த், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சுபாஷ் லாண்டே, சிபிஐ (எம்எல்) மாநில பொதுச்செயலா ளர் ஷியாம் கோஹில் உள்ளிட் டோர் உரையாற்றினர். இதேபோல பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய நபர்களும் தங்கள் நினை வுரையை வழங்கினர். மேலும் மகாத்மா காந்தியின் பேரனும், ஹம் பாரத் கே லோக் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான துஷார் காந்தி, சிஜேபி நிறுவனர் டீஸ்தா செதல்வாட், மூத்த பத்திரிகையாள ரும், முன்னாள் எம்பியுமான குமார் கேட்கர், புகழ்பெற்ற தலித் எழுத்தாளர் அர்ஜுன் டாங்கே மற்றும் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும் டே ஆகியோர் உரையாற்றினர்.

இந்த நினைவஞ்சலி கூட்டம் உணர்ச்சிகரமான புரட்சிகர பாடல்களுடன் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து சீத்தாராம் யெச்சூரியின் நினைவாக இரண்டு நிமிட மவுன அஞ்சலியும், உரத்த முழக்கங்களும் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்வு சீத்தாராம் யெச்சூரியின் வாழ்க்கை மற்றும் பணிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பு களின் ஒற்றுமையை வெளிப் படுத்தியது.