இம்பால் பாஜகவின் வகுப்புவாத அரசியலால் கடந்த 17 மாதங்களாக மணிப்பூர் மாநிலம் வன்முறையால் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. இந்த வன்முறையால் 230க்கும் மேற் பட்டோர் உயிரிழந்த நிலையில், பல லட்சம் மக்கள் சொந்த மாநி லத்திலேயே அகதிகளாக வாழ்ந்து வந்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்ன தாக (சனியன்று) கூட மணிப்பூரின் மேற்கு இம்பாலில் நிகழ்ந்த வன் முறை சம்பவங்களில் கூட 10 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படு காயங்களுடன் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒன்றரை வரு டமாக வன்முறை கொஞ்சம் கூட கட்டுக்குள் வராத நிலையில், மணிப்பூர் மாணவர்களின் கல்வி வாழ்க்கை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. மணிப்பூர் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த 284 குக்கி மற்றும் சோ பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தி வெளியேற வேண்டிய சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். படிப்பை நிறுத்திய லியன் என்ற 30 வயது முனைவர் பட்ட ஆய்வு மாணவர், தனது இரண்டு ஆண்டு கால ஆராய்ச்சிப் பொருட்கள் அனைத்தையும் விட்டுச் செல்ல வேண்டியிருந்ததாகக் கூறுகிறார். பல மாணவர்கள் தங்கள் கணினி, புத்தகங்கள் போன்ற முக்கிய கல்விச் சாதனங்களை எடுத்துச் செல்ல முடியாமல் போனது பெரும் இழப்பாக உள்ளது எனக் கூறியுள்ள னர்.
உச்சநீதிமன்றம் இந்த மாணவர் களை அசாம் பல்கலைக்கழகம் மற்றும் வடகிழக்கு மலைப்பகுதி பல்கலைக்கழகத்திற்கு மாற்ற உத் தரவிட்டிருந்தாலும், பாடத்திட்ட வேறுபாடுகள் மற்றும் சில பாடப் பிரிவுகள் கிடைக்காமை போன்ற காரணங்களால் அது சாத்தியமாக வில்லை. இதனால் பல மாண வர்கள் தங்கள் படிப்பை முழுமை யாக விட்டுவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
284 மாணவர்களில் 93 பேர் தில்லிக்கும், 159 பேர் பிற வட கிழக்கு மாநிலங்களுக்கும், மூன்று பேர் மேற்கு வங்கத்திற்கும் மற்றும் பலர் தென் மாநிலங்களுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் புதிய படிப்புகளிலேயே சேர்ந்துள்ள னர். சிலர் படிப்பை முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர்.
நிதி நெருக்கடி, ஆராய்ச்சி உத வித்தொகை நிறுத்தம், புதிய பல்க லைக்கழகங்களில் சேர இட மாற்றுச் சான்றிதழ் பெறுவதில் சிக் கல்கள் போன்ற பல்வேறு பிரச்ச னைகளை மாணவர்கள் எதிர் கொள்கின்றனர். சிலர் தங்கள் முழு ஆராய்ச்சியையும் புதிதாக தொடங்க வேண்டிய நிலையில் உள்ளனர். இந்த நிலைமை மணிப் பூரில் நிலவும் வன்முறை கல்வி மீதான தாக்கத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. பல மாணவர் கள் தங்கள் கனவுகளையும் இலக்கு களையும் கைவிட வேண்டிய நிலை யில், தங்கள் எதிர்காலம் குறித்து உறுதியற்ற நிலையில் உள்ளனர்.
ராக்கெட் லஞ்சர், டிரோன் தாக்குதல் பற்றி மோடி அரசு வாய் திறக்க மாறுப்பது ஏன்?
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 17 மாதங்களாக வன்முறை சம்ப வங்கள் அரங்கேறி வந்தாலும், இதுவரை இல்லாத வகையில் கடந்த ஒரு வாரமாக டிரோன் மற்றும் ராக்கெட் லாஞ்சர் மூலம் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். டிரோன் மற்றும் ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் என்பது நாடுகளுக்கு இடையே போரின் போது, பயன்படுத்தப்படுவதாகும்.
ஒரு மாநிலத்திற்குள் நிகழும் மோதலில் ராக்கெட் லஞ்சர், டிரோன் தாக்குதல் பயன்பாடு இருப்பது மிகப்பெரிய ஆபத்தை விளை விக்கக் கூடியது ஆகும். இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய மோடி அரசு வாய் திறக்காமல் இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரிடம் இருந்த ராக்கெட் லஞ்சர், டிரோன்களை வன்முறை கும்பல்களுக்கு எப்படிக் கிடைத்தன. எனவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.