இம்பால் பாஜகவின் வகுப்புவாத அரசியலால் கடந்த 17 மாதங்களாக மணிப்பூர் மாநிலம் வன்முறையால் பற்றி எரிந்து வருகிறது. இந்த வன்முறை யால் 230க்கும் மேற்பட்டோர் உயி ரிழந்துள்ளனர். பல லட்சம் மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிக ளாக வாழ்ந்து வரும் நிலையில், மணிப்பூர் பாஜக முதல்வர் பைரன் சிங்கின் செய்தியாளர் சந்திப்பு பேச்சு (ராஜினாமா செய்யமாட் டேன்) மற்றும் தனிப்பட்ட கூட்டத் தில் பேசிய பேச்சின் ஆடியோ (குக்கிகளை ஒடுக்கக் கூறியதாக) கசிவு காரணமாக மாநிலம் முழு வதும் மீண்டும் வன்முறை சம்ப வங்கள் தலைதூக்கியுள்ளன.
குறிப்பாக இதுவரை இல்லாத வகையில் கடந்த ஒரு வாரமாக மணிப்பூரின் பள்ளத்தாக்குப் பகுதியில் டிரோன் மற்றும் ராக்கெட் லாஞ்சர் மூலம் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு 7க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மணிப்பூரில் நிலவும் வன்முறை நெருக்கடியை எதிர்த்து மாணவர்களும் போராட் டத்தில் குதித்துள்ளனர். தலைநகர் இம்பாலில் மணிப்பூரின் அனைத்து மாணவர்கள் சங்கத்தின் தலைமை யில் உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்கள், கல்லூரி மாண வர்கள்,”மணிப்பூரின் டிஜிபி, பாது காப்பு ஆலோசகரை பணி நீக்கம் செய்ய வேண்டும்” என கோரிக்கை முழக்கங்களை எழுப்பி முதல்வர் இல்லம் மற்றும் ஆளுநர் மாளி கையை முற்றுகையிட பேரணி யாக சென்றனர்.
சிஆர்பிஎப் வீரர்கள் தடுத்து நிறுத்தம்
ஆளுநர் மாளிகை செல்லும் வழியிலேயே மாணவர்களை சிஆர் பிஎப் வீரர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் மாணவர்கள் டிஜிபி, பாதுகாப்பு ஆலோசகரை பணி நீக்கம் செய்யும் வரை போ ராட்டத்தை கைவிட மாட்டோம் என முதல்வர் இல்லம் மற்றும் ஆளுநர் மாளிகையை நோக்கி மாணவர்கள் பேரணியை தொடர்ந்த பொழுது, மாணவர்கள் மீது சிஆர்பிஎப் வீரர்கள் தாக்குதல் நடத்த முயன்ற தாக கூறப்படுகிறது. இதனால் வெகுண்டெழுந்த மாணவர்கள் சிஆர்பிஎப் வீரர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்க ளின் எதிர்தாக்குதலை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து சிஆர்பிஎப் வீரர்கள் ஓட்டம் பிடித்தனர். முன் னெச்சரிக்கையாக ஆளுநர் மாளி கைக்கு முன்பு மணிப்பூர் காவல் துறை, ராணுவம், சிஆர்பிஎப் வீரர் கள் நிறுத்தப்பட்டதால் ஆளுநர் மாளிகைக்கு வெளியே மாணவர் கள் போராட்டம் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
“கூண்டில் வாழ்வது போன்று இருக்கிறது”
மாணவர் போராட்டத்தின் ஒருங் கிணைப்பாளர்களில் ஒருவரான தனமஞ்சூரி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் பொதுச்செய லாளர் (பெயரை கூற விரும்ப வில்லை) ஏஎன்ஐ செய்தி நிறு வனத்திடம் கூறுகையில், ”கூண்டில் வாழ்வதற்கும் இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என் பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளு க்கு தெரிவிக்கவே இந்த மாணவர் கள் பேரணி நடத்தப்படுகிறது. மணிப்பூரில் இருந்து துணை ராணுவப் படைகள் திரும்பப் பெறப் பட வேண்டும். தார்மீக அடிப்படை யில் ஆளும் கூட்டணியில் உள்ள 50 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டும். தற்போது மக்க ளுக்கான பாதுகாப்பு வளையங் கள் எதுவும் கிடையாது. அதனால் அசாம் ரைபிள்ஸ், மத்தியப் படை கள் மற்றும் அனைத்தையும் கட்டுப் படுத்த ஒன்றிய அரசும், ஆளுநரும் பாஜகவைச் சேர்ந்த முதல்வருக்கு ஒருங்கிணைந்த உத்தரவை வழங்க வேண்டும். ஆளுநர் எங்கள் கோரிக்கைகளை கேட்பது மாணவர்களின் கூட்டு முயற்சியா கும். பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் டிஜிபி ராஜினாமா செய்ய நாங்கள் விரும்புகிறோம். அதுவரை போராட்டம் தொடரும்” என அவர் கூறினார்.
ரஷ்யா - உக்ரைன் அமைதிக்காக பேசும் அஜித் தோவல் மணிப்பூருக்கு வர மறுப்பது ஏன்?
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்து, இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்வதாகவும், இரு நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் அவர் விரைவில் ஆலோ சனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளி யாகியுள்ளது. இந்தியாவிற்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தாத ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அஜித் தோவலை அனுப்ப மோடி அரசு இவ்வளவு தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், சொந்த நாட்டில் 17 மாதங்களாக பற்றி எரிந்து கொண்டு இருக்கும் மணிப்பூருக்கு அஜித் தோவலை அனுப்பி வைக்க மோடி அரசுக்கு ஏன் மனம் வரவில்லை? என நாடு முழுவதும் கண்டனங்களுடன் பல்வேறு கேள்விகள் எழுந்து வரு கின்றன.