இம்பால், பிப்.9- மணிப்பூர் மாநில முதலமைச்சர் என். பைரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்து, மாநில ஆளு நரிடம் கடிதத்தை வழங்கியுள்ளார். இந்த திடீர் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் கடந்த 21 மாதங்களாக குக்கி-மெய்டெய் இன மோதல்கள் தொடர்ந்து வரு கின்றன. இவற்றில் 260-க்கும் மேற்பட் டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக் கணக்கானோர் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்கின்றனர். வன் முறையை கட்டுப்படுத்த தவறியதாக எதிர்க்கட்சிகள் முதல்வர் மீது குற்றம்சாட்டி வந்தன. சமீபத்தில், வன்முறையைத் தூண்டும் விதமாக முதல்வர் பேசிய தாகக் கூறப்படும் ஆடியோக்கள் வெளி யாகின. குக்கி மாணவர் அமைப்பு இவற்றை கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியிட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. ஆடியோக்களின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய மத்திய தடயவியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை தில்லியில் ஒன்றிய உள்துறை அமைச் சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலை வர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்திய பின்னர், மாலையில் பைரேன் சிங் தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் வழங்கினார். புதிய முதல்வர் பொறுப் பேற்கும் வரை பதவியில் தொடருமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது. கடந்த ஆண்டு ஜூலையிலும் பைரேன் சிங் ராஜினாமா செய்திருந் தார். ஆனால் ஆதரவாளர்களின் எதிர்ப்பால் அதனை திரும்பப்பெற் றார். தற்போதைய பதவி விலகல் உச்சநீதிமன்ற விசாரணையின் காரணமாக இருக்கலாம் என கருதப் படுகிறது. வன்முறையைத் தூண்டிய தாகக் கூறப்படும் ஆடியோ குறித்த விளக்கம் அளிக்க வேண்டிய நிலை யில், முதல்வர் இந்த முடிவை எடுத்துள்ளார்.