மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சித்தார்த் மிருதுள் வரும் 21-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். கடந்த நவம்பர் 18-ஆம் தேதி மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமாரின் பெயரை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்ற ஒன்றிய அரசு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலுக்கு அனுப்பியது. இதை தொடர்ந்து, மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி டி.கிருஷ்ணகுமார் கடந்த 2016 ஆண்டு ஏப்ரல் 7 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வரும் 2025-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி அவர் ஓய்வு பெற உள்ளார்.