states

img

தேசிய ஜனநாயக கட்சி கூட்டத்தை புறக்கணித்த 18 எம்எல்ஏக்கள் மணிப்பூரில் ஆட்டம் காணும் பாஜக அரசு

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் மீண்டும் அதி கரித்து வருகின்றன. மாநிலம் முழு வதும் பாஜக அரசை கண்டித்த போராட்டங் களுடன் வன்முறைச் சம்பவங்களும் தலைதூக்கியுள்ளன. பாஜக முதல்வர் பைரேன் சிங், 3 அமைச்சர்கள், 2 எம்எல்ஏ க்கள் என 6 பேரின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு, இணையதள சேவை முடக்கம், என்ஐஏ விசாரணை, கூடுதல் படை வீரர்கள் என மீண்டும் மணிப்பூர் மாநிலம் உள்நாட்டுக் கலவரம் போல் போர்க்கள மாக மாறியுள்ளது.  இந்நிலையில், வன்முறை தொடர்பான ஆலோசனை கூட்டம் என்ற  பெயரில் மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டம் திங்கள் கிழமை இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தமுள்ள 46 எம்எல்ஏக் களில் 27 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.  பாஜக, நாகா, சுயேச்சை என அரசு ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். அதில் 6 பேர் தங்களது உடல் பாதிக்கப் பட்டுள்ளதாக காரணம் கூறியுள்ளனர். ஒரு அமைச்சர் உட்பட 11 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காதது தொடர்பாக எவ்வித காரணமும் கூறவில்லை. முக்கி யமாக பாஜக கூட்டணியில் மொத்த முள்ள 10 பழங்குடி எம்எல்ஏக்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி களின் கூட்டத்தை  18 எம்எல்ஏக்கள் புறக்கணித்துள்ளதால் மணிப்பூரில் பாஜக அரசு ஆட்டம் காணத் துவங்கி யுள்ளது.  என்பிபி உடைப்பு? மணிப்பூர் வன்முறை சம்பவத்தை கண்டித்து 7 எம்எல்ஏக்களை கொண்ட தேசிய மக்கள் கட்சி (என்பிபி) பாஜக அரசுக்கான ஆதரவை ஞாயிறன்று வாபஸ் பெற்றது. இதன் காரணமாக மணிப்பூர் பாஜக அரசின் பலம் 46  ஆக குறைந்தது. இத்தகைய சூழலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி களின் கூட்டத்தில் என்பிபி கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் கட்சியின் கொறடா உத்தரவுகளை மீறி கலந்து கொண்டுள்ளனர். இதன்மூலம் என்பிபி கட்சியை பாஜக உடைத்துவிட்டதா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.