288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் நவம்பர் 20 அன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதே போல ஜார்க்கண்டில் இரண்டு கட்டமாக (நவம்பர் 13 மற்றும் 20) சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் “இந்தியா” கூட்டணி வலுவான நிலையில் களமிறங்குகிறது. இந்நிலையில், “மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டோம்” என ஆம் ஆத்மி கட்சி தேசிய தலைமை அறிவித்து ள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஆங்கில ஊடகங் கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தில்லி தேர்தலை கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்களில் ஆம் ஆத்மி போட்டி யிடாது. ஹரியானா போல் ஆகிவிடும் என்பதால், மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் “இந்தியா” கூட்டணிக்கு முழு ஆதர வை வழங்குவோம்.மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மி தலைமை விருப்பம் தெரி வித்துள்ளது. இருந்தாலும் பாஜகவை வீழ்த்துவதே முதன்மையான நோக்கம் ஆகும்” என அதில் கூறப்பட்டுள்ளது.