மும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம், வாசி விரார் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள விஜய் வல்லபா கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் உள்ள ஐசியு சிகிச்சை மையத்தில் 17 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் 3.15 மணியளவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 21 பேர் வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் காவல்துறையினர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாசிக் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் டேங்கரில் கசிவு ஏற்பட்டு சப்ளை தடை பட்டதால் கடந்த இரு நாட்களுக்குமுன் 22 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.