states

img

மும்பைக்கு அதிகனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மும்பையில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வட மத்திய மகாராஷ்டிராவுக்கு அருகில் ஒரு புயல் உருவாகியுள்ளது. அதன் காரணமாக வரும் நாட்களில் மகாராஷ்டிராவில் மழைப் பொழிவு இருக்கும். இன்று செப்.27 மும்பையின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாசிக் நகருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பால்கர், புனே, நன்துர்பார் மற்றும் துலே பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிராவின் ஒவ்வொரு நகரத்துக்கும் மஞ்சள் அலர்ட்-யும் விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, மத்திய மகாராஷ்ரா , கொங்கன் மற்றும் கோவா பகுதிகளில் இந்த வாரம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் 12.செ.மீ அதிகமான மழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.

உள்ளூர் அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருவதாகவும், வெள்ளம் காரணமாக ஏதாவது அவசரத் தேவை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, செப்.25-ஆம் தேதி மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் சூழந்துள்ளது. மும்பையில் மழையில் அளவு செப்டம்பர் மாதத்தில் சராசரியாக 350 மி.மீ அளவைக் கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.