states

img

பெங்களூருவில் பதற்றம் : 6 பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்...

பெங்களூரு
கர்நாடக தலைநகர் பெங்களூருவைச் சுற்றியுள்ள பெரும்பாலான 6 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. அதாவது நகரின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மிரட்டல்கள் வந்துள்ளன. சரியாக காலை 11.09 மணியளவில் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை கண்ட போலீசார் அடுத்த சில நிமிடங்களில் மிரட்டல் வந்த பள்ளிகள் இருந்த அனைவரையும் வெளியேற்றினர்.

மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்த பள்ளிகள்: 

1.தில்லி பப்ளிக் பள்ளி, சுலகுண்டே
2.கோபாலன் சர்வதேச பள்ளி, மகாதேவபுரா
3.நியூ அகாடமி பள்ளி, மாரத்தஹள்ளி
4.எபினேசர் சர்வதேச பள்ளி, எலக்ட்ரானிக்ஸ் சிட்டி
5.செயின்ட் வின்சென்ட் பல்லொட்டி பள்ளி, ஹென்னூர்
6.இந்தியன் பப்ளிக் பள்ளி, கோவிந்தபுரா.

இது ஒரு புரளி தான். ஆனாலும் நாங்கள் அதை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம் என கூடுதல் போலீஸ் கமிஷனர் (பெங்களூரு கிழக்கு) டாக்டர் சுப்ரமணியேஸ்வர ராவ் தெரிவித்துள்ளார். 

;