states

img

குவாரிகளுக்கு சட்ட விரோதமாக அனுமதியளித்த வழக்கை தோண்டி எடுத்த சித்தராமையா

பெங்களூரு கர்நாடக முதல்வரும், காங்கி ரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப் புற மேம்பாட்டுக் கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப் படுத்தியது. இந்த நிலத்திற்கு பதி லாக மைசூருவில் உள்ள விஜய நகரில் அவருக்கு 14 வீட்டு மனை கள் ஒதுக்கப்பட்டன‌. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட, மாற்றாக வழங்கப் பட்ட நிலத்தின் மதிப்பு பலமடங்கு அதிகமாக இருந்ததாகக் கூறி, பாஜக - மதஜ கட்சியின் தூண்டு தலால் சமூக ஆர்வலர்கள் டி.ஜே. ஆபிரகாம், பிரதீப் குமார், சிநேக மாயி கிருஷ்ணா ஆகியோர் சித்த ராமையாவுக்கு எதிராக மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரி டம் புகார் அளித்தனர். இது வெறும் புகாராக இருந்தாலும், பாஜக - மதஜ கூட்டணி கட்சிகளின் கோரிக் கையாலும், கர்நாடகாவில் காங்கி ரஸ் ஆட்சியை கவிழ்க்கும் நோக் கத்திலும் முதல்வர் சித்தராமையா மீது ஊழல் வழக்கு தொடர அம் மாநில ஆளுநர் தவார்சந்த் கெலாட் அனுமதி வழங்கினார். 

ஆளுநரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளுந ரின் உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தரா மையா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு திங்களன்று விசார ணைக்கு வந்த நிலையில், நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதி ராக நடவடிக்கை எடுக்க உயர்நீதி மன்ற நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர்.

‘குவாரி குமாரசாமி’

இந்நிலையில், முந்தைய ஊழல் வழக்கு மூலம் ஆளுந ருக்கும், ஒன்றிய அமைச்சர் குமார சாமிக்கும் செக் வைத்துள்ளது கர்நாடக அரசு. கடந்த 2017இல் கர் நாடக முதல்வராக குமாரசாமி இருந்த போது குவாரி நிறுவனத்து க்கு முறைகேடாக அனுமதி வழங் கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தை விசாரித்த லோக் ஆயுக்தா குமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்ய கடந்த 2023இல்  ஆளுநரிடம் அனுமதி கோரியிருந்தனர். ஆனால் ஆளுநர் தவார்சந்த் கெலாட் இதுவரை அனுமதியளிக்கவில்லை. தற் போது  முதல்வர் சித்தராமையா மீதான மூடா மாற்று நில முறைகேடு விவகா ரத்தில் புகார் கிடைத்த அன்றைய தினமே அவருக்கு ஷோ-காஸ் நோ ட்டீஸ் அனுப்பியதுடன், அவர் மீது வழக்குப்பதிய அனுமதியும் வழங் கினார். இது சர்ச்சையை கிளப்பவே, முன்னாள் குமாரசாமி மீதான முறைகேடு வழக்கை விசாரித்து வரும் லோக் ஆயுக்தா போலீசார், அவர் மீது குற்றப்பத்திரிகை தாக் கல் செய்ய ஒப்புதல் அளிக்குமாறு மீண்டும் ஆளுநரிடம் அனுமதி கேட்டுள்ளனர். 

4 நாள் ஆச்சுப்பா

மூடா மாற்று நில முறைகேடு விவகாரம் தொடர்பாக சித்தரா மையா மீது விசாரணை நடத்த பாஜக - மஜத, சமூக ஆர்வலர்கள் (கூட்டாக) கோரிக்கை மனு கொ டுத்தவுடன், அடுத்த 24 மணிநேரத் தில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் சித்தராமையாவை விசாரிக்க உத்த ரவிட்டார். ஆனால் பாஜக கூட்டணி யில் இருக்கும் மதச்சார்பற்ற ஜன தாதள தலைவரும், ஒன்றிய அமைச் சருமான குமாரசாமியை குவாரி ஊழல் வழக்கில் விசாரிக்க லோக் ஆயுக்தா போலீசார்  அனுமதி கேட்டு வியாழனன்றுடன் 4 நாட்கள் ஆகி விட்டது. ஆனால் தவார்சந்த் கெலாட் குவாரி குமாரசாமி ஊழல்  தொடர்பாக வாய் திறக்கவில்லை. இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

குமாரசாமியை விசாரிக்க லோக் ஆயுக்தா போலீசார் ஆளு நருக்கு நெருக்கடி அளித்து வரும் நிலையில், கர்நாடகாவில் ஆளு நர் மூலம் ஆட்சிக் கவிழ்க்க திட்டம்  தீட்டி தோல்வியடைந்துள்ளது பாஜக.

‘குமாரசாமியை கைது செய்ய  ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் போதும்’

கர்நாடக காங்கிரஸ் அரசின் பதிலடியால் மிரண்ட ஒன்றிய அமைச்சர் குமாரசாமி செய்தியாளர் சந்திப்பில்,”என்னை கைது செய்ய நூறு சித்தராமையாக்கள் வர வேண்டும். என்னைப் பார்த்தால் பயப்படுபவர் போல இருக்கிறதா?” என்று தெரிவித்தார். 

அதற்கு பதிலடி கொடுத்த சித்தராமையா,”குமாரசாமியை கைது செய்ய 100 சித்தராமையாக்கள் இல்லை, ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் போதும். 100 சித்தராமையாக்கள் வந்தாலும் அவரை கைது செய்ய முடியாது. ஏனென் றால் நான் கைது செய்யப் போவதில்லை, காவல்துறைதான் கைது செய்யும். அவர் பயப்படவில்லை என்றால், அவர் செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்க மாட்டார்” என்று கூறினார்.