states

ஹிஜாப்புடன் தேர்வு எழுத அனுமதியளித்த 7 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

பெங்களூரு, மார்ச் 30-  இஸ்லாமிய மாணவிகள் கல்வி நிறு வனங்களுக்கு  ஹிஜாப் அணிந்து வர சில இந்துத்துவ கும்பல்கள் எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தனர். கர்நாடக பாஜக அரசும் உடனே ஹிஜாப் அணிந்துவர தடைவிதித்தது. உயர்நீதிமன்றமும் ஹிஜாப் தடைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து, அரசு உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் கடக்  மாவட்டத்தில் உள்ள சி.எஸ்.பாட்டீல் ஆண் கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.எஸ்.பாட்டீல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடைபெற் றது. இந்த தேர்வின் போது மாணவிகளை  ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனு மதித்த 7 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். இரண்டு மைய கண்காணிப்பா ளர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள 3,444 தேர்வு மையங்களிலும், 144 தடை உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது.