states

img

அவதூறு பிரசுரம் வெளியிட்ட சமூகவிரோதிகள் கைது செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதுச்சேரி, மே.19- அவதூறு பிரசுரம் வெளியிட்ட சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் இரகு.அன்புமணி மீது அவ தூறு பரப்பும் வகையில் (மொட்டை நோட்டீஸ்) துண்டு பிரசுரம் வெளியிட்ட வர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் அட்டூ ழியத்தில் ஈடுபடும் குண்டர்களையும் அடை யாளம் கண்டு புறக்கணிக்க வலியுறுத்தியும் மதகடிப்பட்டு கடை வீதியில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிர தேசக்குழு உறுப்பினர் வே. சங்கர் தலைமை தாங்கினார். மூத்தத் தலைவர் தா.முருகன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் சுதா, பெருமாள், ராமச்சந்திரன், கொளஞ்சியப்பன், சீனி வாசன், கலியமூர்த்தி,சத்தியா, கொம்யூன் செயலாளர் அன்புமணி மற்றும் பலர் உரையாற்றினர்.

;