புதுச்சேரி, ஏப்.13- புதுச்சேரி அரசின் மின் துறையில் காலியாக உள்ள இளநிலை பொறி யாளர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படும் என்ற அறிவிப்பாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று ( ஏப்.13) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வுபெற்ற பொறியாளர்களை மின் துறையில் நியமனம் செய்யப்படும் என்ற நிதித் துறையின் ஒப்புதலை, ரத்து செய்து படித்து முடித்த இளைஞர்களை நியமனம் செய்ய வேண்டும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின்துறையை மறைமுகமாக தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் பாலாமோகனன், பொதுச் செய லாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் பிரேமதாசன், கீதா, கிறிஸ்தோபர், முனுசாமி, ஆனந்த கணபதி, கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கலந்து கொண்டனர்.