பீகாரில் புதிதாக அமைந்துள்ள பாஜக கூட்டணி யில் முதல்வர் நிதிஷ் குமாரை தவிர்த்து பாஜக வைச் சேர்ந்த துணை முதல்வர்கள் உட்பட 8 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதா வது பாஜக அமைச்சர்களுக்கு 23 துறைகளும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு (ஜேடியு) 19 துறைகளும் வழங்கப் பட்டுள்ளன.
இதில் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரிக்கு (பாஜக) நிதி, வணிக வரிகள், நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி, சுகாதாரம், விளையாட்டு, தொழில் துறை என மிக முக்கிய இலாகாக்கள் அவருடைய கைவசம் உள்ளது. மற்றொரு துணை முதல்வரான விஜய் குமார் சின்ஹாவுக்கு விவசாயம், சாலை கட்டு மானம், வருவாய் மற்றும் நிலச் சீர்திருத்தம், பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் என 9 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக தலை வரான பிரேம் குமாருக்கு கூட்டுறவு, பேரிடர் மேலா ண்மை, சுற்றுலா மற்றும் 5 இலாகா பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முக்கிய பொறுப்புகள் அனைத்தும் பாஜகவிடம் உள்ள நிலையில், மற்ற 19 டம்மி துறைகளில் ஐக்கிய ஜனதா தள தலை வர்கள் அமைச்சர்களாக உள்ளனர். அதாவது ஐக் கிய ஜனதா தளம் சார்பில் முதல்வர் பதவி மட்டுமே நிதிஷ் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து முக்கிய பொறுப்புகளும் பாஜகவின ருக்கு எடுத்துக்கொண்ட நிலையில், பீகாரில் டம்மி யாக்கப்பட்டுள்ளது ஐக்கிய ஜனதாதளம்.
ஹைதராபாத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
மோடி அரசின் மிரட்ட லுக்கு பயந்து ஐக் கிய ஜனதா தலை வர் நிதிஷ் குமார் “இந்தியா” மற்றும் “மகாகத்” கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் பாஜக கூட்டணிக்கு தடம் புரண்டு முதல்வராக பொறுப் பேற்றார். நிதிஷ் குமார் பிப்.12- ஆம் தேதி பெரும்பான்மையை நிரூ பிக்க சட்டமன்ற சபாநாயகர் உத்தர விட்டுள்ள நிலையில், வழக்கம் போல பாஜக குதிரை பேரத்தை தொடங்கியுள்ளது.
பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், அவர்களில் 3 பேர் ‘மாயமாகியுள்ள தால்’, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜார்க்கண்ட் எம்எல்ஏக்களை போன்றே ஹைதராபாத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிதிஷ் கட்சியையும் பாஜக உடைக்கிறதா?
பீகாரில் தற்போது நிதிஷ் - பாஜக கூட்டணிக்கு 127 எம்எல்ஏ-க்கள் ஆத ரவாக உள்ளனர். ஆர்ஜேடி - காங்கி ரஸ் - இடதுசாரிகள் அடங்கிய “மகா கத்” கூட்டணிக்கு 115 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. பெரும்பான் மைக்கு 122 எம்எல்ஏ-க்கள் போது மானது என்ற நிலையில், 5 எம்எல்ஏக் கள் கூடுதலாகவே நிதிஷ் - பாஜக கூட்டணிக்கு உள்ளனர். பிறகு ஏன் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக வளைக்கிறது? என்ற கேள்வி பல மாக எழுந்துள்ளது. ஒருவேளை காங்கிரஸ், நிதிஷ் கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மகாராஷ்டிரா போல பீகாரிலும் சட்ட விரோத ஆட்சியை பாஜக துவங்கப் போகிறதா என்ற சந்தேகம் கிளம்பி யுள்ளது.